From Tue May 4 13:02:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 16212 invoked by uid 7770); 4 May 1999 20:02:25 -0000
Received: from swan.prod.itd.earthlink.net (207.217.120.123) by vault.egroups.com with SMTP; 4 May 1999 20:02:25 -0000
Received: from default (pool035-max1.ds17-ca-us.dialup.earthlink.net [209.179.7.235]) by swan.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id NAA12164 for ; Tue, 4 May 1999 13:02:22 -0700 (PDT)
Message-ID: <00b301be964e$86985be0$eb07b3d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 4 May 1999 12:52:41 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Forumhub articles
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 419

> "கொங்கன் வந்து பொங்கினான், கொழியரிச்சோற்றினை:
> சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
> இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
> எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"
>

ஜெயபாரதி சும்மா போடமாட்டார்.

எழுதினத பேசாம படிச்சிட்டு போன்னு சொல்றமாதிரி இல்ல.
வெறும் சாப்பாட்டு சமாசாரமாவும் தெரியலே. ஒரு பெரிய
தத்துவம் இருக்கராப்போல இருக்கு.

சாப்பாட்டுக்காலம் ( வாழுங்காலம்) குறைவு. அது சரியில்ல இது சரியில்லன்னு
நம் இலையில போட்டதை (நமக்கு அமைந்த வாழ்வை) சாப்பிடாமல் (ஏற்று வாழாமல்)
மற்றவர் இலையைப்பார்த்து முழிக்காமல் (மற்றவருக்கு அமைந்த வாழ்வைப்பார்த்து பொறாமைப்படாமல்) ,
எங்கள் பாவம் எங்கள் பாவம் ஈசனேன்னு (ஏதோ இது நம் தலையெழுத்துன்னு
தேற்றிக்கொண்டு) சாப்பிட்டு முடிக்கணும் (வாழவேண்டும்) என்று சொல்கிற மாதிரி
இருக்கிறது.


-----Original Message-----
From: jayabarathi
To: agathiyar@egroups.com
Cc: vassan
Date: Monday, May 03, 1999 7:32 PM
Subject: [agathiyar] Re: Forumhub articles


>
> அன்பர்களே,
>
> எக்கச்சக்கமான எழுத்துப்பிழைகள். ஸ்டெனோ
> வைத்துக்கொண்டால்தான் நல்லது.
> யாராவது கொஞ்ச இளசு, கொஞ்சும் இளசாகப்
> பார்க்கவேண்டும்:-)
> கதையை இன்னும் சற்றுப் பூர்த்தி செய்துள்ளேன்.
> சாமிநாதன் போன்ற கவிஞர்கள் இருக்கும் இடத்தில்
> சரியாகச்செய்யாவிட்டால் அது அபசாரமாகிவிடும்.
>
>
>> சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் சைவ முனிவர் சிறந்த கவிஞர். அவர் சன்னியாசம் வாங்கிய
>புதிது.
>> அப்போதெல்லாம் ஆதீனங்களில் hierarchy நிறைய உண்டு.
>ஸீனியர் சுவாமிகள், ஜூனியர் சுவாமிகள், ஸப்ஜூனியர் சுவாமிகள்
>என்றெல்லாம் ஏணிப்படிகள் இருந்தன. அதற்கேற்ப சாப்பாட்டுப்
>பந்தியிலும் வாசை; வாசையில் இடம்; இப்படியிருக்கும். பொய
>சன்னிதானம் சாப்பிட ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் சாப்பிட
>ஆரம்பிக்க வேண்டும். அவர் சாப்பிட்டு எழும்போது அனைவரும்
>இலையைவிட்டு எழுந்துவிடவேண்டும். சாப்பிட்டுமுடிக்க
>வில்லையானால் அது அவனவன் தலையெழுத்து.
>> அந்த மடத்திற்கு கோயம்புத்தூர்ப்பக்கத்திலிருந்து ஒரு
>சமையற்காரன் வந்திருந்தான்.
> பொய சுவாமிகள் முதலிய அனைவருக்கும் நல்ல
>அசியையும் மற்றவர்களுக்குக் குறுணை அசியையும் சோறாக்கி
>வைத்திருந்தான்.
>> பந்தி ஆரம்பமாகியது. இலை போட்டாயிற்று. சோறு பாமாறப்பட்டது.
>குறுணை அசிச்சோறு; குழைந்தும்போயிருந்தது. நெல்லும் கல்லும்
>இடையிடையே.
> பார்த்தார் சிவப்பிரகாசர்; திகைத்தார்;
>> தயங்கினார். பின்னர் சொன்னார்.....
>
>> "கொங்கன் வந்து பொங்கினான் கொழியாசிச்சோற்றினை"
>
>> அருகில் அமர்ந்திருந்த ஒரு ஜூனியர் சுவாமிகள், அவரைப்பார்த்து ஜாடையாக எச்சாத்தார்,
>
>> "சங்கமங்கள் கூடியே சாப்பிடத்தொடங்கின"
>
>> அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஜூனியர் சுவாமிகள்,
>
>> "இங்கும் அங்கும் பார்க்கிறீர்; இலையிலே கண்ணில்லையே!"
>என்று அங்கலாய்த்தார்.
>
>> பயந்துபோனார், சிவப்பிரகாசர். மற்றவர்கள் எல்லாம் உண்டு
>முடித்து எழுந்துவிடுவார்கள்; தயங்கி நின்ற சிவப்பிரகாசர் பட்டினியாக அல்லவா எழவேண்டியிருக்கும்!
>ஆகவே,
>
>> "எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"
>> என்று சொல்லிமுடித்து சிவனேயென்று சோற்றை விழுங்கிவைத்தார்.
>
>இது பிற்காலத்தில் தர்மபுர ஆதீனத்தில் வழங்கப்படும் ஒரு பாடலாகிவிட்டது. One of the "Sagas of
>Tharmapura Adhiinam".
>
> "கொங்கன் வந்து பொங்கினான், கொழியரிச்சோற்றினை:
> சங்கமங்கள் கூடியே சாப்பிடத் தொடங்கின!
> இங்கும் அங்கும் பார்க்கிறீர்! இலையிலே கண்ணில்லையே!
> எங்கள் பாவம்! எங்கள் பாவம்! எங்கள் பாவம், ஈசனே!"
>
> இதை "நட்டகல்லைத் தெய்வமென்றே" என்ற சந்தத்தில்
>சொல்லிப்பாருங்கள்; நன்றாகயிருக்கும்.
> இதனை மதுரையில், குழந்தையானந்த சுவாமிகளின்
>சமாதியையும் அவர் நிறுவிய, கல்லில் வரையப்பட்ட ஸ்ரீசக்ரயந்திரத்தையும்
>பார்த்துவிட்டு, பாண்டியர்கள் அரண்மனையிருந்த இடம், கோவலன்
>பொட்டல் ஆகிய இடங்களுக்கும் செல்வதற்காக டாக்ஸியில்
>சென்றுகொண்டிருந்த சமயத்தில், பேரறிஞர் டாக்டர் ஜெயச்சந்திரன்
>சொன்னார். அதைக் காரிலேயே டேப் பதிவு செய்துகொண்டேன்.
> சீர்காழியைச்சேர்ந்த டாக்டர் என்.வி. ஜெயராமன்
>மலாயாப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது டெலிபோனில்
>ஒருமுறை இதே பாடலைச்சொன்னார். அவர் சீர்காழி கோவிந்தராஜனின்
>சிற்றப்பா பிள்ளை. அவர் சொன்னபோதுதான் இது தர்மபுர வழக்கு என்று
>புரிந்தது. ஏ.வி.ஜே.யும் தர்மபுரத்து ஆதீனம் நிறுவிய அனைத்துலக
>சைவ சித்தாந்த நிறுவனத்தின் இயக்குனராக அப்போது இருந்தவர்தான்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>================================================
>
>------------------------------------------------------------------------
>SIGN UP FOR LIFEMINDERS FAMILIES AND ENTER TO WIN $1000 CASH!
>Get FREE parenting and toy tips according to your child's age via
>e-mail at http://clickhere.egroups.com/click/174
>
>
>eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
>http://www.eGroups.com - Simplifying group communications
>
>
>


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/group/agathiyar
http://www.eGroups.com - Simplifying group communications