From Sat Sep 18 12:46:53 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 18 Sep 1999 19:49:50 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15029 invoked from network); 18 Sep 1999 19:49:49 -0000
Received: from dfw-ix8.ix.netcom.com (206.214.98.8) by qh.egroups.com with SMTP; 18 Sep 1999 19:49:49 -0000
Received: (from smap@localhost) by dfw-ix8.ix.netcom.com (8.8.4/8.8.4) id OAA01132 for ; Sat, 18 Sep 1999 14:49:43 -0500 (CDT)
Received: from sji-ca1-153.ix.netcom.com(209.109.232.153) by dfw-ix8.ix.netcom.com via smap (V1.3) id rma001108; Sat Sep 18 14:49:13 1999
Message-ID: <007c01bf020e$7b317620$99e86dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To:
Date: Sat, 18 Sep 1999 12:46:18 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] Re: 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2118

>>சண்முகம் என்றொரு இளைஞர். "எண்களின் வரிசையில் எட்டுக்குப்பிறகு
>>ஒன்பது வரக்கூடாது. அது பிழை",என்கிறார். "எட்டுக்குப்பிறகு ஒன்பது அல்ல.
>>ஒம்பு என்பதே சரி( ஆறு ,ஏழு, எட்டு, ஒம்பு, பத்து) அது போல எண்பதுக்குப்
>>பிறகு ஒன்பது, எண்ணூருக்குப்பிறகு தொண்ணூறு என்று மாறி வர வேண்டும்"


>This is correct; Old Tamil word for numeral 9 is "thoNDu".

பண்டைத்தமிழர்களும், சிந்து சமவெளி மக்களும் எட்டின் அடிப்படையில்
உருவான எண் அமைப்பைப் (an Octal (8-based) number system )
பயன்படுத்தினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
அதனால், 8 என்பதைக் குறிப்பிடும் சொல் எண் (number) என்ற வேர்ச்
சொல்லைக் கொண்டுள்ளது. பது அல்லது பத்து என்ற சொல்லின்
பொருள் பல (many) என்றும், ஒன்பது என்பது 'பல' விலிருந்து
'ஒன்'றைக் கழித்தது என்பதால் ஒன்பது என்று வந்தது என்பர்.


>>இவர் இந்த எண் சீர்திருத்தத்தைக் கொண்டு வர பல வி.ஐ.பிக்களைச்சந்தித்து
>>முயற்சி எடுக்கும்படி கேட்கிறார்.

இதைப் பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை! மிக முக்கியமான ஆட்கள்
"ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இன்று ஏழைகள் வேதனைப் படமாட்டார்"
என்று நம்புவது மனதைத் தொடுகிறது. முதலில் இந்த "சீர்திருத்தம்" தேவையா
என்று மக்கள் சிந்திக்க வேண்டாமா? பண்டைத்தமிழர்கள் எட்டின் அடிப்படை
எண்ணமைப்பைப் பயன்படுத்தினார்கள், இன்றைய கணினிகள் பதினாறின்
அடிப்படை எண்களைப் பயன்படுத்துகின்றன, அதனால், தமிழர்களும் பதினாறின்
அடிப்படை எண்களைப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சீர்திருத்தத்தைத்
துவக்கலாமா? இது தேவையற்ற முயற்சி என்பது எனது கருத்து. அது மட்டுமல்ல
இது போன்ற முயற்சிகள் முதலில் மக்கள் மனதைக் கவருவதில் துவங்கி
இறுதியில் அரசும், மி.மு.ஆட்களும் தாமே இவ்வகையான சீர்திருத்தங்களை
ஆதரிக்க வந்தால் நல்லது.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.