From kamaladeviaravind@... Sun Oct 28 15:38:08 2001
Return-Path:
X-Sender: kamaladeviaravind@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 23:38:07 -0000
Received: (qmail 61499 invoked from network); 28 Oct 2001 23:38:07 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.224 with QMQP; 28 Oct 2001 23:38:07 -0000
Received: from unknown (HELO hotmail.com) (64.4.31.32) by mta1 with SMTP; 28 Oct 2001 23:38:07 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 28 Oct 2001 15:38:07 -0800
Received: from 203.117.33.25 by pv1fd.pav1.hotmail.msn.com with HTTP; Sun, 28 Oct 2001 23:38:07 GMT
X-Originating-IP: [203.117.33.25]
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: Re: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai - Correction
Date: Sun, 28 Oct 2001 23:38:07 +0000
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 28 Oct 2001 23:38:07.0346 (UTC) FILETIME=[988D6520:01C16009]
From: "Kamala Devi"
X-Yahoo-Message-Num: 12737


------------
கரம் கூப்புகிறேன் ஸார்,தங்கள் தமிழுக்கு,---.
மடிவிரதமும் நைவேத்யமுமாய், ஈஷ்வரியின் பாதத்தில் விழுந்து கிடக்கமட்டுமே தெரியும், ஆனால் தாங்கள்,
தங்களின் கவிதை, கவிதையல்ல,னவரத்ன ஹாரமல்லவா சார்த்தியுள்ளீர்கள் ஈஷ்வரிக்கு.
அம்பிகையின் விஜயதசமி தினம் படிக்காமல் போனேனே,
நன்றி உங்கள் கவிதைக்கு, வாழ்த்துக்கள் உங்கள் தமிழுக்கு.
ஒரு பார்வையாளர்.


>From: "Hari Krishnan"
>Reply-To: agathiyar@yahoogroups.com
>To: "Agathiyar@Yahoogroups.Com"
>Subject: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai - Correction
>Date: Fri, 26 Oct 2001 01:35:04 -0000
>
>இதற்கு முன்னால் அனுப்பிய பாடல்கள் ஒன்றிரண்டில் இருந்த பிழைகளைத் திருத்தி அனுப்புகிறேன்.
>ஹரி கிருஷ்ணன்.
>
>புவனேஸ்வரி நவரத்ன மணி மாலை
>
>காப்பு
>
>தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
>கவுரியின்தன் மூத்த களிறே - புவனையின்மேல்
>சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
>வல்லபை தன்னோடு வந்து.
>------
>
>உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
> உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
> உதரத்துதி மகவாயது உருவுற்றெழு ஜகமாய்
> உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
>அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
> அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
> அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
> அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
>வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
> மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
> வலியாய்ப்பெறு நிலையாயொலி ஹ்ரீமென்றிடும் அலையாய்
> மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
>புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
> பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
> படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
> படுவெந்துயர் கணமேபட திடமாயிரு மனனே. (1)
>
>மனமே பேயே பெரும்பாழே
> மாயக் கனவின் பிறப்பிடமே
> வாழ்வும் மயர்வும் ஒன்றாக
> மயங்கிக் கலக்கு மிருளொளியே
>கனக்கும் சிந்தை கற்பனையும்
> கவிதைப் பரவச அதிர்வுகளும்
> கவலை பொய்கள் பெருமோகம்
> கலந்து கிடக்கும் உள்வெளியே
>உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
> உயரே போகையில் சரிகின்றாய்
> ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
> உனக்கும் எனக்கும் என்னபகை?
>சினத்தைப் புகைக்கும் செயலாளின்
> செக்கர் பவளத் திதழாளின்
> தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
> தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)
>
>கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
>வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் - அம்புயமேல்
>பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
>அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)
>
>துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
>பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
>அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
>சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)
>
>மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> வடிவாகி நின்ற உமையே
> வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> மகிழ்வாகும் என்றன் மகளே
>துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> சுடராகும் வாலை யமுதே
> சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> துடியாட்ட மாடு மொளியே
>பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> பரிகாச மென்ன பெண்ணே
> பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> பறந்தோடி வாவென் மயிலே
>அயலேயும் நின்று அருகாக வந்து
> அழகாக நோக்கு மம்மே
> அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> அமுதூறு முத்து மொழியே.(5)
>
>மொழியான சிந்தை அறிவாலயம்
> முடிவான எண்ணம் அன்பாலயம்
>வழியான கண்கள் விழிவாகனம்
> மனமீதில் அம்மை ஆவாகனம்
>பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
> புகழேறு கின்ற கோமேதகம்
>மெழுகென்ற போதும் என்றன்மனம்
> மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)
>
>அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
>iம்மா மலையுதித்த எம்மிதய - சிம்மத்தில்
>பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
>சிற்பரையே சிந்தை தெளி. (7)
>
>தெளித்த கோலம் வானெல்லாம்
> சிதறிக் கிடக்கும் செம்பவளம்
> தீப்பட் டெரியும் மாணிக்கம்
> செக்கச் சிவந்த கெம்புக்கல்
>வளிமண் டலமே வயிரக்கல்
> மஞ்சள் பச்சை நீலத்தில்
> மாயா ஜால வைடூர்யம்
> வானக் கடலில் நன்முத்து
>வெளிதட விடுமொளி புவனையின்கண்
> விரிந்த நீலம் அவளுடலே
> மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
>விமலை நிமலை கமலையுமாய்
> அளித்துக் காக்கும் அன்னையுமாய்
> அன்பிற் கனிந்த தேவியுமாய்
> அடியாற் கெல்லாம் ன்னுயிராய்
> ஆகும் செம்மை மாமணியே. (8)
>
>செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
> தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
> சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
> செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
>எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
> எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
> எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
> எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
>அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிட நாளும்
> அருவீணையின் சையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
> அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
> அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள் பெய்வாய்
>எம்மைச்சுடு மறியாமையின் ருள்முற்றிலும் போக்கி
> iதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
> ஏற்றம்பட மாற்றம்பெற எமையாக்குதல் கடனே!
> iறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)
>
>நூற்பயன்
>
>கேட்ட பொருளெதுவும் கேட்காத நற்பயனும்
>வாட்டம் தொலைத்த மனநிலையும் - கூட்டும்
>புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
>நவரத்ன மாலை நலம்.
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>


_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp