From kisna@... Wed Nov 07 06:41:11 2001
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 7 Nov 2001 14:41:10 -0000
Received: (qmail 12930 invoked from network); 7 Nov 2001 14:41:09 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 7 Nov 2001 14:41:09 -0000
Received: from unknown (HELO spade.pacific.net.sg) (203.120.90.71) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 7 Nov 2001 14:41:08 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by spade.pacific.net.sg with ESMTP id fA7Ef0004158; Wed, 7 Nov 2001 22:41:00 +0800
Received: from kisna (mcns230.docsis31.singa.pore.net [202.156.31.230]) by smtp1.pacific.net.sg with SMTP id fA7Ef0l31063; Wed, 7 Nov 2001 22:41:00 +0800
Message-Id: <3.0.6.32.20011107224356.007b7d70@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 07 Nov 2001 22:43:56 +0800
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com, tamil@...
Subject: Suratha Kaveethai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Message-Num: 12881



```````````````````````````````````````````````````````
நமது பழைய கோப்பிலிருந்து ஒரு கவிதை
``````````````````````````````````````````````````````



<><><><><><><><> 0 <><><><><><><><><><><><>
ஓலைச் சுவடியியில் உள்ள கதை இது. தீபவதி முழுக்கைத்தான்
'' தீபாவளிப் பண்டிகை '' ஆக்கி அதற்கோர் 'அரக்கன் கதை'யையும்
புனைந்து நம்மவர் அறிவை மழுங்கச் செய்துவிட்டார் அரிய
மதத்தார் என்கிறார் உவமைக் கவிஞர் சுரதா
<><><><><><><> () <><><><><><><><><><><><><>

பள்ளியெனும் நாடுதனை ஆண்டு வந்த
பருபனெனும் மன்னவனைப் பார்த்துப் பேச
உள்ளத்தில் கள்ளமில்லாப் பெளத்த சங்க
உத்தமர்கள் வந்திட்டார் ஒருநாள்; வேந்தன்
வெள்ளத்தின் அலைபோல் எழுந்தே அந்த
விஞ்ஞானப் பெரியோர்க்கு வணக்கம் செய்தான்
எள்கொடுக்கும் செடி வந்தோர் வைத்திருக்க
என்னசெடி ஈத்தென்று மன்னன் கேட்டான்.

இதைப்பற்றி விளக்கத்தான் இங்கு வந்தோம்
இச்செடியை ஐப்பசியில் தேய் நிலாவின்
சதுர்த்தசியி லேகண்டு பிடித்தோம்; ந்ல்ல
சத்துதரும்; இது கொடுக்கும் எள்ளி னாலே
புதிய சுவை கண்டிடலாம்'' என்றார். கேட்டுப்
பூவேந்தன் பூரித்து, அவரை நோக்கி
'இதுதானா உபயோகம்? இன்னும் உண்டா?
எடுத்துரைப்பீர் அத்தனையும் எனக்கு' என்றான்.

''நேத்திரத்தின் ரோகத்தை நீக்கும்; மேக
நீரிருந்தால், எலும்புருக்கி நோயி ருந்தால்
மாத்திரையேன்? இதைத்தேய்த்துக் கொண்டால் போதும்
மற்றபடி பலகாரப் பொருள்க ளோடு
சேர்த்துப்பா ருங்கள் இதைக் தெரியும் நாங்கள்
செயல்முறையில் பல தடவை அனுபவித்துப்
பெளத்தமதச் சங்கத்தார் எடுத்து ரைத்தார்.


தார்வேந்தன் இதைக்கேட்டான்; எள்நெய் தேய்த்துத்
தலைமுழுகிப் பார்த்திட்டான்; மகிழ்ந்தான்; மேலும்
பார்ப்போமே சோதித்து இதனை என்று
பலகாரம் சுடச்சொல்லித் தின்று பார்த்தான்;
ஊர்மக்கள் முன்னிலையில் எண்ணெய் பற்றி
உரைத்திட்டான் விரிவாக; கேட்ட மக்கல்
ஆர்வத்தில் எண்ணெய்தனைத் தேய்த்துப் பார்க்க
அங்கேயே அப்போதே ஆரம்பித்தார் !

குடிபடைகள் தன்னெதிரே எண்ணெய் தேய்த்துக்
கொண்டதனைக் கண்டவுடன் எள்ளின் நெய்யை
முடிவேந்தனும் தேய்த்துக் கொண்டு நீரில்
மூழ்கிவர தீபவதி நதிக்குச் சென்றான்
தொடர்ந்திட்டார் குடிமக்கள், அவனை; நீரில்
தொப்பென்று குதித்திட்டார் நெய் நீராடி
குடரேந்தி அவர்பின்னே ஆண்கள் சென்றார் !

புதிதாக எள்கண்டு பிடிக்கப் பட்ட
பொன்னாலின் நினைவாக ஆண்டுக் கோர்நாள்
அதைக்கண்டு பிடித்திட்ட மாத மான
ஐப்பசி சதுர்த்தயில் மக்கள் தீப
வதி என்னும் நதி தன்னில் நெய் நீராடி
வந்திட்டார்; புத்தாடை புணைந்தார் அன்று
புதியவைதாம் ஆடையெல்லாம்; ஆனால் காதல்
புரிபவரின் உடல் மட்டும் புதிய தல்ல !