From poo@... Sun Dec 02 12:04:13 2001
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 2 Dec 2001 20:04:12 -0000
Received: (qmail 16927 invoked from network); 2 Dec 2001 20:04:11 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 2 Dec 2001 20:04:11 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 2 Dec 2001 20:04:12 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sun, 2 Dec 2001 23:01:26 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.51.249]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sun, 2 Dec 2001 23:03:48 +0300
Message-Id: <4.3.0.20011202230649.00cf44a0@...>
X-Sender: poo/202.54.6.1@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sun, 02 Dec 2001 23:11:55 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: RE: [agathiyar] Re: Ramblings and rumblings
In-Reply-To: <9DB6357440BAD411A6A00050BA8CA56B0A9840B7@... ys.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 13643

At 04:05 PM 12/02/2001 +0530, you wrote:
>"சில்லென்று பூத்த" --- "ஆட வந்த தெய்வத்தில்" இடம் பெறும் பாடலா இல்லை "மாலையிட்ட
>மங்கையிலா"?
>
>-----Original Message-----
>From: jaybee [mailto:jaybee@...]
>Sent: Saturday, December 01, 2001 6:28 PM
>To: agathiyar@yahoogroups.com
>Subject: Re: [agathiyar] Re: Ramblings and rumblings
>
>
>At 12:45 PM 12/1/01 +0000, you wrote:
> >--- In agathiyar@y..., jaybee wrote:
> >> ஆனால் 'சில்'லென்று ஐS
>தண்ணீர் இருக்கும். இதற்கும் ஆங்கிலத்தின்
> >> chill-லுக்கும் தொடர்பு இருக்கிறதா, என்ன?
> >>
>'சில்லல்லவா சில்லல்லவா, காதல் நயகரா...'
> >> 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே'
>என்று
> >> டீயார் மகாலிங்கம் 'ஆடவந்த தெய்வத்தில்' பாடுகிறார். அதென்னது, சிறுநெருஞ்சி
> >> பூப்பது
>சில்லென்றா இருக்கும்?
> >
> > சில் என்றால் தமிழில் சிறுஇ என்றே அர்த்தம். சில்லென்று பூத்த
> > =
>சிறிதாய்ப் பூத்த. சில்லி = சிறியது(இது cell, computer chip
> > இரண்டுக்கும்
>பொருந்தும்).

அன்பிற்குரிய கணேசனுக்கு,

"சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே" என்று தொடங்கும் கவியரசர் கண்ணதாசன் பாட்டு
"மாலையிட்ட மங்கை" படத்தில் வந்து, அந்தக் காலத்தில் பலர் மனத்தையும் கொள்ளை கொண்ட பாட்டு.

சில் என்ற சொல்லுக்கு இங்கே "சிறு" என்ற பொருள் கொள்ளுவது சரியாக அமையாது. நெருஞ்சிப் பூ
சிறியதாக இருப்பதைத்தான் சிறு நெருஞ்சி என்று கவியரசர் கூறிவிட்டாரே! பின் ஏன் கூறியது கூறல்?

இங்கே சில் என்பது சில்லிக் கிடப்பது (அதாவது சிதறிக் கிடப்பது பற்றி) என்று எண்ணுகிறேன்.

சில்லுதல் என்பது துண்டாகும் வினை பற்றியது. (இந்த வினையால் சில்லுச் சில்லாக சிறு பொருள்கள்
கிடைப்பது இதன் உடன் பொருள்.)

சிதறு தேங்காயில் கிடைப்பது தேங்காய்ச் சில்.

சில்லுருதல் என்ற வினையில் இருந்துதான்சில்லரை>சில்லறை என்ற சொற்கள் பிறந்தன.

சில்லாடுதலும் சிதறுவதுதான். அதனால் தான் சில்லாட்டு என்பதும் சில்லரை என்ற பொருள் கொண்டது.

இப்படி உடைந்து சேதப் பட்டுப் போனதால் தான், அரத்தம் வடியும் மூக்கு சில்லி மூக்கு (சில்லிய முக்கு) என்று
சொல்லப் படுகிறது.

துண்டாக்கப் பட்ட கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி (அது அவ்வளவு சிறிதாக இருக்காது); மொந்தைக்
கருப்பட்டியில் இருந்து சில்லிய கருப்பட்டி சில்லுக் கருப்பட்டி. சாப்பிட்டிருக்கிறீர்களோ? அமிழ்தம் போன்றது.

சில்லுச் சில்லாக (துண்டு துண்டாக)ச் சிதறுகிற தூறல் சில்வானம்.

சில்லுகிற தொழிலால் பெறப்பட்ட உருவம் தான் சில்லை>சிலை. சில்லுதல் = உளி கொண்டு கல்லை
உடைத்தல்; துண்டாக்குதல், சிதறவைத்தல்.

இன்னும் பார்த்தால், சில்லுதல் = சில்தல்>சிதல்>சிதர் = துண்டாகிய பொத்தை (body) பரந்து படுதல்;
சிதர்>சிதறு

நெருஞ்சிப் பூ சிதறினாற்போல் பரந்துபூத்துக் கிடக்கும் காடு "சில்லென்று பூத்தசிறு நெருஞ்சிக் காடு".

எங்கள் வறண்ட, செம்மண் பரந்த, சிவகங்கை மாவட்டத்திற்கு வாருங்கள். இந்த உண்மை புலப்படும்.

அன்புடன்,
இராம.கி.


> >
> > "சில்லல்லவா, சில்லல்லவா, காதல் நயகரா" - து நிச்சயம்
> > ஆங்கில வார்த்தை
>chil. தமிழ், ஏனை இந்திய மொழிகளில்
> > ஆங்கிலம் நன்கு வேர்விட்டு வளர்கிறது. தமிழ் மொழிப்
>பள்ளிகள் குறையக்
> > குறைய, அரசாங்கம் புது வாத்தியார்களை அமர்த்தாது விட,
> > கிராமப் பள்ளிகள்
>அழிய, அழிய - தமிழ் என்னாகுமோ?
> >
> >> நாம் ஏன் 'கொல்'லென்று சிரிக்கிறோம்? யாரைக்
>கொல்லவேண்டும்,
> >> ஏன் கொல்லவேண்டும்? அல்லது 'கொல்' என்ற ஓசை எழுகிறதா?
> >
> > வேறொன்று.
>தமிழில் கொல் என்னும் அசைச்சொல் உண்டு.
> > யாது கொல்? யாவன் கொல்?, ... இதுஇ "சொல்"
>என்பதுதான்
> > என்று தமிழ்ப் பேரா. வேங்கடராfலு ரெட்டியார் எழுதியிருக்கிறார்கள்.
> >
> > அன்புடன்,
> >
>நா. கணேசன்
>
>
>
> குறளிலும் மேற்சொன்ன 'கொல்' வரும். 'அணங்கு கொல்'
>போன்ற சொற்பிரயோகங்கள் உண்டு.
> ஆனால் 'கொல்' லென்ற சிரிப்பில் வரும் 'கொல்' இதுவல்ல.
>
>அன்புடன்
>
>fயபாரதி
> >
> >------------------------ Yahoo! Groups Sponsor
>
>------------------------------------------------------------------------
>---------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>------------------------------------------------------------------------
>---------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to
>http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>