இது என் புகுந்தது இங்கு அந்தோ இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவின் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்.
பாடல் மூன்று
எல்லே ஈதென்ன இளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தேறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே.
பாடல் நான்கு
பரக்க விழித்து எகும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்கி நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கம் மேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கரசாவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்.
பாடல் ஐந்து
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்.
பாடல் று
தடம் அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல வேதனை ற்றவும் பட்டோம்.
குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே.
பாடல் ஏழு
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி இல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல்லாம் உணர்வானே
ர்வம் உனக்கே உடையேம் அம்மனைமார்கள் காணில் ஒட்டார்
போரவிடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்தேறி இராதே.
பாடல் எட்டு
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லோரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சாலச் சிக்கனம் நாமிது சொன்னோம்
கோமள யர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்.
பாடல் ஒன்பது
கஞ்சன் வலை வைத்த அன்று காரிருள் எல்லிப் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் யசோதை ணாட விட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமை இலீ கூறை தாராய்.
பாடல் பத்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com