From ramaninaidu@... Sun Dec 23 08:35:14 2001
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 23 Dec 2001 16:35:16 -0000
Received: (qmail 94194 invoked from network); 23 Dec 2001 16:35:16 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 23 Dec 2001 16:35:16 -0000
Received: from unknown (HELO smtp011.mail.yahoo.com) (216.136.173.31) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 23 Dec 2001 16:35:14 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.58) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 23 Dec 2001 16:35:10 -0000
Message-ID: <000401c18bd0$380cb5a0$3aeac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: thiruvempavai 9 tamil
Date: Sun, 23 Dec 2001 21:46:14 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14206

திருவெம்பாவை - நாள் ஒன்பது - பாடல் ஒன்பது

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்

திருவெம்பாவை ஒன்பதாவது பாட்டின் முதலிரண்டு வரிகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பெருமை உள்ளவை.

பாவை நோன்பு நாடகத்தில் ஆறாவது பாட்டில் ஒரு திருப்பம் உண்டென்று சொல்லியிருந்தோம். சிலர்
அத்திருப்பம் ஒன்பதாவது பாட்டிலேயே ஆரம்பமாகிறது என்பர். ஐந்து பாடல்களில் வீட்டுக்குள் உறங்குகிறவளை
எழுப்பி ஆறாம் பாடலில் இருந்து பாவை நோன்பிருக்க வீதி வழி செல்லும் பாவையர் தமக்குள் பேசிக்
கொள்வதைச் சொல்வதாகச் சொல்வார்கள். ஆயின் முதல் சக்தி முதல் பாட்டில் இரண்டாவது சக்தியை எழுப்ப
பிற ஏழு சக்திகளை அடுத்த ஏழு சக்திகளை எழுப்புவதாகச் சொல்லப்படுவதால் எட்டு பாடல்களில் பாவை
நாடகத்தின் ஒரு பகுதி அமைகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. எனவே ஒன்பதாவது பாடல்
தொடங்கி பாவை நோன்பின் நாடக அமைப்பில் ஒரு திருப்பம் இருக்கிறது என்று சொல்வது பொருந்தும்.
ஒன்பதாவது பாடலில் எழுந்துவிட்ட கன்னியர் இறைவனுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.

முற்பட்ட எந்தப் பழைய பொருளுக்கும் முற்பட்ட பழம் பொருளாக இருப்பவனே.
பிற்பட்ட புதுமைப் பொருளுக்கும் அப்படியே புதுமைப் பொருளாக இருப்பவனே.
இத்தகைய உன்னைத் தலைவனாகப் பெற்ற சிறப்பு வாய்ந்த அடியவர்களாகிய நாங்கள் உன் அடியவர்களின் அடிகளைப்
பணிவோம்.
உனக்கு அடியவர்களாக இருக்கும் அவர்களுக்கே நாங்கள் நண்பர்களாயிருப்போம்.
அத்தகைய அடியவர்களே எங்களுக்குக் கணவர்களும் ஆவர்.
அவர்கள் விரும்பிச் சொல்லிய தன்மையிலே அவர்களது விருப்பத்தையே பணியாக ஏற்றுக் கைங்கரியம்
செய்வோம்.
இந்த வகையிலே எங்களுடைய அரசனாகிய நீ அருள் புரிவாயானால் எந்தக் குறைபாடும் இல்லாதவர்கள் ஆவோம்.

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்று பிறிதோர் இடத்தில் மாணிக்க வாசகர் இறை இயல்பு பற்றிச்
சொல்வார். இறைவன் முதலும் முடிவும் நடுவும் என்று சொல்லி அத்தகைய எல்லைகளுக்குக் கட்டுப்பட்டவன் என்று
புரிந்து கொள்ளலாகாது என்பதற்காக உடனே அல்லானே என்றும் சொல்லிப் போகிறார். ஆங்கிலத்தில்
Transcendent Reality என்று சொல்வதற்குச் சரியான தமிழ்ச் சொல் கடவுள் என்பதாக அமையும். கடந்து
உறைபவன் கடவுள். எனவே தன் இயல்பால் பழையதற்குப் பழையதாய் புதியதற்குப் புதியதாய் இருப்பவன் கடவுள்
என்று புலப்படுத்துகிறார்.

ஓஷோ தாவோ தத்துவம் பற்றிய தனது பேச்சில் கடவுள் தீர்ந்து போகாதவர் என்று பொருள் படும் வகையில்
inexhaustible என்ற சொல்லைப் பயன்படுத்துவார். எந்த அளவுக்குக் கடவுள் தீர்ந்து போகாதவர் என்றால்
முன்னைப் பழம் பொருளுக்கும் முந்தியவர் என்ற வகையில் என்க. முன்னைப் பழம் பொருள் என்பதற்கு ஆங்கிலத்தில்
Primordial Reality என்ற பொருள் படும் ஆதியம் பகவன் என்று பொருள் கொண்டோமேயானால் ஆதியம்
பகவன் கூட ஒன்றுக்கு ஆதியாகும் காலத்தைக் குறிப்பதால் எல்லை வகுப்பதாக ஆகி விடும். எனவேதான் ஆதியனே
அந்தம் நடுவாக அல்லானே என்று குறித்தார் என்க.

கலீல் ஜிப்ரான் ஓரிடத்தில் வேட்கை கொண்ட ஆன்மா பற்றிப் பேசும் போது சிருஷ்டியின்
மூலத்தில் இருந்திருக்கிறேன். நித்தியத்தின் அந்தத்தில் இருக்கப் போகிறேன். என் ஜீவிதம் என்றைக்கும்
வாடிப் போகாது என்று எழுதுவார். ஆத்மா வாழ்வின் தொடக்கமான பிறப்பில் ஆரம்பிப்பதில்லை என்பதும்
முடிவான மரணத்தில் முடிவதில்லை என்பதும் கருத்து. என்றாலும் ஆன்மாவுக்கு சிருஷ்டியின் மூலத்தில் ஆரம்பம்
கற்பித்து நித்தியத்தின் அந்தத்தில் முடிவு கற்பிப்பதாகக் கொள்ளலாம்.

கடவுளோ இதைத் தாண்டியவர் என்ற பொருளிலேயே முன்னைப் பழம் பொருட்கும் முன்னவன் என்றும் பின்னைப்
புதுமைக்கும் புதுமையானவன் என்றும் சொல்லிப் போகிறார் என்க.

காலம் என்ற அளவையின் ஆட்சிக்கு உட்பட்டவை ஆன்மா உள்ளிட்ட அனைத்தும். எனவே காலம் என்ற எல்லை தாண்டிய
கடவுளைப் புரிந்து கொள்வது சிரமம்தான். ஆனால் பரம்பொருள் அப்படிக் கால எல்லைகளுக்குள் கட்டுப்படாதவர்
என்ற பொருள் தரும் வகையிலேயே அவரைக் காலாதீதன் என்று சொல்வது வழக்கம்.

வரையறைக்கு உட்படாத இறைவனை ஆண்டானாகப் பெற்றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் உண்டு. அடியார்
தாள்களை வணங்குதல், அடியார்களையே கணவர்களாகப் பெறுதல், அவர்கள் எம்மை மகிழ்ந்து ஏற்று எமக்கு இட்ட
பணிகள் செய்தல் ஆகியவை தம் அடிமைத் திறம் என்கிறார்கள். இந்தப் பேறே தமக்கு வேண்டும் என்கிறார்கள்.

இப்படியாக குறிக்கோள் விளக்கமாக அமைவது ஒன்பதாவது பாடல். சேக்கிழாரும்

அத்தர் வேண்டி ஆண்டவர் அன்பினால்
மெய்த்தழைந்து விதிர்ப்புற சிந்தையார்
கைத்திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்

என்று சொல்வார்.

வைணவம் பரமனுக்கு அடியனாக இருப்பதை விடவும் பாகவதனுக்கு அடியனாக இருப்பதை வலியுறுத்திப் பேசும்.
சைவத்துக்கும் இக்கருத்து உடன்பாடே. பாகவதனாய், அடியவனாய் இருப்பதை விட பரம பாகவதனாய், அடியார்க்கு
அடியவனாய் இருப்பது மேம்பட்ட பேறு என்க.

தாயுமானவர் சொல்வதையும் பாருங்கள். அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை
தானே வந்து எய்தும் பராபரமே.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com