அன்புள்ள மதுரபாரதி
நன்றி.
ஆமாம் சிலம்பில் என்னென்னவோ நுணுக்கங்கள் உள்ளன.
அதைக் கடந்த சில மாதங்களாகக் காலைவழிபாட்டுக்கு ஓதுகிறேன்.
அதன் தெய்விகம் வாயால் சித்திரிக்க முடியாதது என்பது உள்ளத்தை
நெகிழ்த்துகிறது.
செங்கவி சுப்பிரமணியபாரதி 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்"
என்றது ஆழமுள்ளதுதான்.
அன்புடன்
பெ.சந்திரசேகரன்.
> On Wed, 02 Jan 2002 Periannan Chandrasekaran wrote :
> > உ
> > கண்ணகியை அஞ்சிய மதுராபதித் தெய்வம் - 1
> >
> > பெரியண்ணன் சந்திரசேகரன்
> >
> > என்ன, சங்கத் தமிழ்ச் சான்றோரைக் கூட்டிச் செங்கோல் பிழையாமல் ஆள்வதே
> > ஆண்மை யென்ற கோட்பாட்டுடன் ஆளும்
> > பாண்டியர்களின் கொற்றம் விளங்கும் மாமதுரையின் தலைமைக் கடவுள்
> > போயும்போய் கண்ணகி யென்னும் ஒரு மனிதப்
> > பெண்ணை அஞ்சுவதா? ஆம், சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி தீயழல்
> > மடுத்த அழற்படுகாதையின் பின்
> > நிகழும் கட்டுரைகாதையில் அர்த்தநாரீசுவரராகத் தோன்றும் மதுராபதித்
> > தெய்வம் கண்ணகியின் முன் வர அஞ்சி
> > அவள் பின்புறத்தே தோன்றி "நங்கையே! தோழியே!" என்று அழைத்தது என்று
> > இளங்கோவடிகள் கூறுகிறார்.