From harikris@... Sat Jan 12 19:29:51 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 03:29:51 -0000
Received: (qmail 58505 invoked from network); 13 Jan 2002 03:29:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 03:29:51 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 03:29:50 -0000
Received: from harikris ([203.199.240.77]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPUXPL02.6AW for ; Sun, 13 Jan 2002 08:59:45 +0530
Message-ID: <008301c19be2$ffd13760$4df0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <20020112033958.22902.qmail@...>
Subject: Re: [agathiyar] AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa
Date: Sun, 13 Jan 2002 09:01:16 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14714

அன்புள்ள முருகன்,

சேஷாசலத்தின் வெண்பாக்கள் மிக அருமை. அதுவும் சேத்துப்புண் பாட்டில் உணர்ச்சி விம்மிப் பொங்குகிறது. முதல் பாட்டின் முதலடி நான்காம் சீர் "சிறகுகொடு வர்ணமெல்லாம் வேணுமென்ப தில்லையே" "வேணுமென்ப தில்லை" என்று நின்றிருக்க வேண்டும். ஒரு "யே" அதிகமாக இருக்கிறது. அச்சுப் பிழையாக இருக்கலாம். அதே போல மூன்றாமடியை "பானமெல்லாம் வேணாமே தண்ணீர் கொடுபோதும்" என்று பிரிக்க வேண்டும். (நான்காம் சீர்). புத்தியைக் காட்டுகிறேன் என்று நினைக்க வேண்டாம். செம்மையான பாடல்கள் தவறாகக் காட்சிப்படுத்தப்படக் கூடாதே என்ற கவலையால் சொல்கிறேன்.

அவர் வார்த்தையில் "நான் புலவனில்லை. முழு நேர விவசாயி" என்று சொல்லிக் கொள்ளட்டும். பரவாயில்லை. எந்நாளும் கவிதைகள் கவிஞனால்தான் இயற்றப்படுகின்றன. விவசாயியோ, வங்கி அதிகாரியோ, கணினி மென்பொருள் தயாரிப்பவரோ, விற்பவரோ, ஸ்டெனோகிராபரோ, அரசுத் துறை கிளார்க்கோ கவிதை எழுதுவதில்லை. கவிஞன்தான் - கவிஞன் மட்டும்தான் - எழுதுகிறான். அவன் மற்ற துறைகளால் பிழைப்பு நடந்த நேர்ந்திருக்கிறது என்பது தற்செயல். பாரதி பாடல்களை, பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய கவிதைகள் என்று சொல்லிப் பாருங்கள்! (கவிதை எழுதத் தெரிந்த மருத்துவரின் மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மேஜையில் கிடக்கும் நோயாளியிடம் போய் 'வாளாலே அறுத்தும்மைச் சுடவின்று பறந்தோடி வருகிறார் நம்கவிஞர் காண்' என்று சொல்லித்தான் பார்க்கட்டுமே!)

"வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னால் கூட" பாடலைக் கான்ஸ்ட்டபிள் எழுதிய கவிதை என்று ஒரு காலத்தில் எழுதியிருந்தார்கள். அன்று வந்த கோபம் இன்றும் வந்தது. (சத்தியமா உங்க மேல இல்லண்ணா.) அந்த மாதிரி வாக்கியங்களைப் பார்த்தால் உடனே அப்படியாகி விடுகிறது. :-) ஆனால் அப்படிச் சொல்லி கொள்வது சேஷாசலம். அவர் அப்படித்தான் சொல்லிக் கொள்வார். அது அவருடைய அடக்கத்தினால் மட்டுமல்ல. பெருமித உணர்வினாலும் என்பது படைப்பாளிகளுக்குத் தெரியும். பெருமிதம் என்பது தான் இயற்றிய பாடலைப் பற்றியது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. வாக்கியம் சொல்லும் செய்தி ஒன்று. வாக்கியத்தில் உள்ளூறித் ததும்பும் உணர்ச்சி வேறொன்று.

சேஷா சலமுங்க செய்யுளுக்குள் பொங்குகிற
ஆசாபா சங்கள் அற்புதம்யா! - பேஷாக
உம்மைக் கவியென்றே ஓங்கிநான் சொல்லுகிறேன்
அம்மைதாள் நெஞ்சில் அணிந்து.

கல்லையும் மண்ணினையும் காடு கழனியையும்
நெல்லென்றும் கம்பென்றும் நேசமாக - மெல்லப்
பயிராக்கும் கைகளுக்குள் பாயாதோ சொல்லை
உயிராக்கும் உண்மை உணர்வு.

பார்க்கெலாம் சோறூட்டப் பண்படுத்தும் கைகொண்டு
வார்க்கின்ற சொல்லும் மணக்குதையா - ஏர்க்கலப்
பைக்குள்ளும் வாழும்; பசிய எழுத்தூறும்
மைக்குள்ளும் வாழும் உலகு.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: "era.murugan achwin"
To:
Sent: Saturday, January 12, 2002 9:09 AM
Subject: [agathiyar] AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa


|
| எழுதியவர், அவர் வார்த்தையில், "நான் புலவனில்லை. முழு நேர
| விவசாயி".
|
|
| சேஷாசலத்தின் சில கவிதைகள் :
|
| பிரார்த்தனை
| ----------------
|
| சிறகுகொடு வர்ணமெல்லாம் வேணுமென்ப தில்லையே
| சருகுகொடு வேணாம் விறகு - பருகுதற்கும்
| பானமெல்லாம் வேணாமே தண்ணீர்கொடு போதும்
| நான்சமா ளிக்கமாட்டே னா?
|