From arull@... Fri Jan 25 07:35:53 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 15:35:53 -0000
Received: (qmail 22007 invoked from network); 25 Jan 2002 15:35:52 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 25 Jan 2002 15:35:52 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 25 Jan 2002 15:35:51 -0000
Received: from tmnet (kmr-146-40.tm.net.my [203.106.146.40]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQI00IDN3BNQE@...> for agathiyar@yahoogroups.com; Fri, 25 Jan 2002 23:35:50 +0800 (SGT)
Date: Fri, 25 Jan 2002 23:36:03 +0800
Subject: vElvAngku vakuppu
To: agathiyar@yahoogroups.com
Message-id: <000d01c1a5b6$007ce2e0$28926acb@...>
MIME-version: 1.0
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4133.2400
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4133.2400
X-Priority: 3
X-MSMail-priority: Normal
From: arull
Reply-To: arull
X-Yahoo-Group-Post: member; u=21400202
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15194

Blank
திருச்சிற்றம்பலம்

14. வேல்வாங்கு வகுப்பு

திடவிய நெஞ்சுடை யடியரி டும்பைகெ டும்படி

தீயாங்குறை போயாழ்ந்தது

செயசெய வென்றிசை பரவிய வெங்கள்கொ டுங்கலி

தேசாந்தர மேசாய்ந்தது

செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்

தீமான்கதர் தாமேங்கினர்

சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல்

தீமூண்டுதன் வாய்மாண்டது

தெரியலர் சென்றடை திசைகளி லெண்கரி சிம்பெழ

மாறாங்கிரி நூறாந்தொளை

சிகரநெ டுங்கிரி குகைகடி றந்துதி கந்தமும்

லோகாந்தமு நீர்தேங்கின

சிறையுள ழுந்திய குறைக ளொழிந்துசெயங்கொடு

தேவேந்திரர் சேணாண்டனர்

திரிபுவ னங்களு மொருபய மின்றிவ ளங்கெழு

சீர்பூண்டற நேர்பூண்டன;

விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்விலங்கது

கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன்

விகசித சுந்தர விதரண வைந்தரு வெந்தெழில்

வீவான் பொழில் பூவாய்ந்தது

விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல

நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள்

வெருவியொ துங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித

மேலாம்படி யேமீண்டனர்

விழியொரி ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்

மேல்வாங்கிளை கால்சாய்ந்தது

வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கியெழுங்கன

சூர்மாண்டற வேர்மாய்ந்தது

விபுதர்ப யங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு

மேடாம்படி பாடோங்கின

மிடைகுறள் வெங்கொடி கழுகுப ருந்து விருந்தென

வூனார்ந்தகல் வானார்ந்த;

அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி

யாமாங்கதர் வாமாங்கனை

அநுபவை யம்பிகை யநுதிதை யம்பைத்ரியம்பகி

யாசாம்பரை பாசாங்குசை

அநகைய சஞ்சலை யதிகுண சுந்தரி யந்தரி

காலாந்தகி மேலாந்திரு

அமலைய லங்க்ருதை யபிநய பங்குரை சங்கினி

மானாங்கணி ஞானாங்குரை

அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல்

வாய்கான்றிடு நாகாங்கதை

அபயவ ரம்புரி யுபயக ரந்திக ழந்தணி

யாமாங்கறி தாய்மாண்பினள்

அதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு

பாய்மாண்கலை வாய்மாண்புன

அணிகுற மின்புணர் தணிகையி லந்தண னிந்திர

ராசாங்கம தாராய்ந்தவன்;

வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய

மாடாம்புடை நாடாண்டகை

வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட

வேபாண்டவர் தேரூர்ந்தவன்

வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துதடங்குடை

வார்பூந்துகில் வார்பூம்புயல்

வரைநிரை கன்றின முழுதும யங்கிய பண்கெழு

வேயேந்திய வாயான்கழல்

மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை

வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன்

மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில்வஞ்சக

மாமான்பகை கோமான்றிரு

மருகனி ரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி

வாகாம்பரை தோய்காங்கெயன்

மகபதி தன்பதி பகைகிழி யும்படி யன்றடல்

வாளோங்கிய வேல்வாங்கவே.

திருச்சிற்றம்பலம்



ஓதுவார்

பினாங்கு.





[Non-text portions of this message have been removed]