கண்ணபிரான் மாதரிடம் (மணம் ஆன/ஆகாதவர்கள்) கிருஷ்ணலீலை
புரிந்ததை நமது தமிழ்நாட்டுப் பிறந்த மகாகாவியங்கள் வர்ணிக்கின்றன.
iஇதனைத் தத்துவார்த்தமாகப் பார்க்கவேண்டும் என்று பழைய ஆசார்யர்கள்
எழுதியுள்ளனர். ஆழ்வார்கள் பாடலில் மாதிரிக்கு:
http://groups.yahoo.com/group/agathiyar/message/10074
காவலர், பாவலர், நாவலர் என்பதுபோலக் கோவலர்.
வடமொழியில் கோபாலர் என்பது கோவலரின்
மாற்றமாக இiருக்கலாம்.
கோவலன் என்று பேர் வைத்தாலே பிரச்சினை.
சரவணபவன் (ராச)கோவாலு கதை நேற்றுக் கேட்டேன். :-)
--- In tamil-ulagam@y..., "K.M. Sulaiman." wrote:
>
> >From: "N. Ganesan" > >ஆழியாற்றங்கரையில், சித்தூர் போகும்பாதையில்
> >அமைந்த அழகிய ஊர் அம்பராம்பாளையம்.
> >ஆழியாற்றுக்கு ஆம்பராவதி என்றும் பேர்,
> >எனவே அம்பராம் பாளையம். அங்கு
> >மறைதிரு. மதார்சா ராவுத்தர் சமாதி உள்ளது.
> >தாயத்து போன்றன அளிப்பார்கள்.
> >அவர் சூலக்கல் அம்மனைப் பாடிய நூல்
> >என்று G. U. போப்பையர் தொகுப்பால் கண்டேன்.
> >iஇந்த ஊர்களையெல்லாம் நம் நண்பர்
> >திரு. K. M. சுலைமான் நன்கறிவார்கள்.
>
> பழசையெல்லாம் கிளறிவிட்டுட்டீங்களே அண்ணே..!
>
> ஆழியாறும், மலையும், அந்த பங்களாவும், அதன் பக்கவாட்டு சரிவும்,
> அங்கேக் கூடிய நண்பர்களும், சோம பானமும்...;-)
>
> ஆனாங்கண்ணே, அம்பராம்பாளையம் தெரியும்...ஆனா,
> மதார்சா ராவுத்தரை எனக்குத் தெரியாது.;-)
>
> அங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் போது போயிட்டு வர,
> எங்கூட்டு பொம்பளைங்களுக்குத் தெரியும்.
> அவங்களுக்குத்தான் இந்த தாயத்தோட மகிமையெல்லாம் தெரியுது.
>
> ஆனாக்கா, நமக்கு என்னமோ அது விளங்கவே மாட்டேங்குது.:-)
>
> அன்புடன்
> தம்பி
> சுலைமான்.
ஜமால்சா ராவுத்தர் மகன் மதார்சா ராவுத்தரே
சூலக்கல் மாரியம்மன் அம்மானையில் தன்னைப்பற்றிச்
சொல்கிறார்:
"அடிமை சரணமம்மா ஆத்தாளே சூலக்கல்லாள்
அறிவிலாச் சிறுபால ராத்தானே தோத்தரித்தோம்
ஆயிரங்கண் பொன்மாரி ஆத்தாளே காக்கவேணும்
ஆம்பரா வதினதிசூழ் அம்பராம்பாளையத்தில்
ஜமால்ராவுத்தன் பெற்ற தபோபல புத்திரனும்
அங்காள பரமேஸ்பரி அம்புயப் பதங்களையும்
மதுரை வீரன் உபய வனசமலர்த் தாளினையும்
பத்தியுடன் நாளும் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா
மாரியம்மன் புகழிதனை மண்டலத்தில் சொல்தன்னால்
ஊற்றுநகர் வாழும் உபாத்தியாரில் சிறந்த
iஇலட்சுமண தீரன் மெச்ச வெழுதிவைத்தார்
என்கருத்துக் கெட்டாமல் என்னபிழை யிருந்தாலும்
எழுத்துப்பிழை சொற்பிழைகள் என்னகுறை யிருந்தாலும்
கற்றோர்க்கு நானடிமை கவிவாணர்க் கைதொழுதேன்"
என்று ஓட்டமாக அம்மானை போகிறது.
ஊத்துக்குழி இலட்சுமண பிள்ளை "உசித சூடாமணி"
என்ற ஒருபொருட்பன்மொழி அகராதி செய்தவர். (Thesaurus)
பிள்ளை மதார்சா சொல்லச் சொல்ல எழுதியிருக்கிறார்
போலத் தெரிகிறது.