From jaybee555@... Mon Feb 25 22:06:53 2002
Return-Path:
X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 26 Feb 2002 06:06:53 -0000
Received: (qmail 18728 invoked from network); 26 Feb 2002 06:06:53 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 26 Feb 2002 06:06:53 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Feb 2002 06:06:53 -0000
Received: from jaybee555 (AUTH poptime) at unknown (HELO user) (210.186.103.18) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 26 Feb 2002 06:06:50 -0000
Message-Id: <3.0.3.32.20020226140716.01900444@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 26 Feb 2002 14:07:16 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: For Chandra SEkaran..and others:-)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=26960409
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 16240


திருஞனசம்பந்தரின் தந்தையார் சிவபாத இருதயர், தம்
மைந்தன் பாடிய திருப்பதிகங்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும்
பூசையின் போது பாடி வழிபடுவது உண்டு. புதிது புதிதாக சம்பந்தர்
பாடுவதையும் அன்றாடம் அவர் வழிபாட்டில் சேர்த்துக்கொள்வார்.
அதனால் சிவபூசையின் நேரம் நீண்டு விளங்கலாயிற்று.
ஆகவே தம் தந்தையாரின் சிரமம் தீரும்பொருட்டு, சம்பந்தர்
'திருவெழுகூற்றிருக்கை' என்னும் பாடலை இயற்றினார். இதனைப்
பாடினால் அனைத்துத் திருப்பதிகங்களையும் பாடிய பலன் ஏற்படும்
என்றும் சம்பந்தர் விளக்கினார்.

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்.

ஓருருவாயினை மானாங் காரத்(து)
ஈரியல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகளாயினை
இருவரோ டொருவன் ஆகி நின்றனை

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வருக்கு ஒளிநெறி
காட்டினை நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடு ஒருமதி சூடினை
ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம்

நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்(து)
இருகோட்டு ஒருகரி யீடழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச

கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோ(டு)
இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து

நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்(து) ஆறங்க முதலெழுத்து ஓதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபதம் முரலுடன் வேணுபுரம் விரும்பினை

இகலியம் ஐந்துணர் புகலி அமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதைய, மேல்மிதந்த
தோணிபுரத்(து) உறைந்தனை தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை.

வரபுரம் என்றுணர் சிரபுரத்(து) உறைந்தனை
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்(து) அருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறுபதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்

மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்

அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தில்

அன்புடன்

ஜெயபாரதி

================================


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com