>
> என்றும் அன்புடன்,
> நாக சுப்ர மணியன். சொ.
>
>
> --- In agathiyar@y..., jaybee wrote:
> > At 07:01 AM 3/1/02 +0530, you wrote:
> >
> > சேஷாத்ரி என்பவர் ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தின்
> > பொருளதிகாரியாக இருந்தவர். தியாகையரின் மீது ஆழ்ந்த
> > ஈடுபாடு கொண்டவர். பல தியாகராஜ ஆராதனைகளில் பங்கேற்று
> > உரைகள் நிகழ்த்தியவர்.
> > தியாகையரின் கிருதிகளை பேருரைகளுக்காக
> > ஆராயும்போது அவருக்கு ஒரு விசயம் புலனாகியது.
> > தியாகையருடைய கிருதிகளில் சிலவற்றை ஒரு குறிப்பிட்ட
> > வரிசையில் தொகுத்தால், இராமாயணக்கதையின் சாரம் கிடைக்கும்
> > என்பதைக் கண்டறிந்தார்.
> > ஆகவே அவற்றையெல்லாம் திரட்டி, இராமாயணக்
> > கதையின் போக்கில் தொகுத்து, 'ஸ்ரீதியாகராஜக்ருதி ராமாயணமு'
> > என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். 1980-ஆம் ஆண்டில்
> > ஹைதராபாதில் நடந்த தியாகராஜ ஆராதனையின் போது, இது
> > வெளியீடு கண்டது.