From poo@... Sat Mar 09 10:07:30 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 9 Mar 2002 18:07:30 -0000
Received: (qmail 43606 invoked from network); 9 Mar 2002 18:07:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 9 Mar 2002 18:07:30 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.151) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 9 Mar 2002 18:07:30 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Sat, 9 Mar 2002 21:03:22 +0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.58.106]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Sat, 9 Mar 2002 21:07:07 +0300
Message-Id: <4.3.0.20020309213018.02c66100@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sat, 09 Mar 2002 21:34:49 +0300
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] aLavaikaL
In-Reply-To: <20020309172026.13121.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 16574

At 05:20 PM 03/09/2002 +0000, you wrote:

>மிகத்துல்லியமாக அளக்கப்படவேண்டிய பொன்னளவை கடுகு என்ற அலகிலிருந்தும், நீட்டல் அளவை அணு என்ற
>அலகிலிருந்தும் துவங்குவதைக் காண்கிறோம்.
>
>இரணியன் வதைப் படலத்தில் "எங்கே இருக்கிறான் ஹரி, தூணிலிருக்கிறானா?" என்று இரணியன் கேட்க
>அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:
>
> சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
> கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும் உளன் இந்நின்ற
> தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
> காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்
>
>என வருகிறது.
>
>ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது இப்பாடல். தமிழில்
>இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க முடியும், அதனால்தான் இந்த வினா)

சரியான கேள்வி. பெரியவர்தான் விளக்க வேண்டும்.


> அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
> குறுகத் தறித்த குறள்
>
>என்று திருக்குறள் பாயிரத்தில் வரும். நாம் அந்த அணுவை atom என்று பொருள் கொள்கிறோம். நம்
>முன்னோர் அறிந்த அணு இந்த நீட்டலளவையின் அணுவாகத்தான் இருக்கமுடியும்.
>அறிந்தோர் விளக்கவும்.

உண்மை. அணு என்பதற்கு அதுமம் (தயங்காமல்பயன்படுத்துங்கள்; இது அல்+துமம் = துமிக்க முடியாதது) என்ற
பொருளே இதுவரை கொண்டுள்ளோம். மாறாக அது நீட்டல் அளவையாக இருந்தால்? உங்கள் சிந்தனை புதிது.
அய்யா, மருத்துவர் அய்யா, இங்கே சற்று வாருங்களேன்?

>அன்புடன்
>
>மதுரபாரதி
>
>
> > >On Sat, 09 Mar 2002 Krishnan Ramasamy wrote :
> > > >அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> > > >
> > > >அண்மையில் திரு சாபு மரக்கால் பற்றி இட்ட இடுகையின் பின், பழைய அளவைகள் பற்றி
> > > >உரையாடல் எழுந்தது.
> > > >இனிப் படிப்போர் பார்வைக்கு:
> > > >
> > > >எடுத்தல்:
> > > >
> > > >4 கஃசு = 1 தொடி அல்லது பலம்
> > > >8 பலம் = 1 சேர்
> > > >5 சேர் = 1 வீசை
> > > >5 வீசை = 1 துலாம்
> > > >8 வீசை = 1 மணங்கு
> > > >20 மணங்கு = 1 கண்டி
> > > >
> > > >பொன்னளவை:
> > > >
> > > >5 கடுகு = 1 சீரகம்
> > > >5 சீரகம் = 1 நெல்
> > > >4 நெல் = 1 குன்றிமணி
> > > >2 குன்றி மணி = 1 மஞ்சாடி
> > > >2 மஞ்சாடி = 1 பணவெடை
> > > >10 பணவெடை = 1 கழஞ்சு
> > > >
> > > >முகத்தல்:
> > > >
> > > >260 நெல் = 1 செவிடு அல்லது கண்டு
> > > >2 செவிடு = 1 ஆழாக்கு
> > > >2 ஆழாக்கு = 1 உழக்கு
> > > >2 உழக்கு = 1 உரி
> > > >2 உரி = 1 நாழி அல்லதி படி
> > > >8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால்
> > > >2 குறுணி = 1 பதக்கு (பாண்டி நாட்டில் 10 படி)
> > > >2 பதக்கு = 1 தூணி
> > > >3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு)
> > > >21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு)
> > > >18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு)
> > > >4 (சிறு)படி = 1 வள்ளம்
> > > >40 வள்ளம் = 1 கண்டகம் ( செலம் வட்டாரவழக்கு)
> > > >6 மரக்கால் = மூட்டை
> > > >64 மூட்டை = 1 கரிசை
> > > >5 மரக்கால் = 1 பறை
> > > >80 பறை = கரிசை
> > > >
> > > >படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு
> > > >வழக்கு
> > > >
> > > >நீட்டல்:
> > > >
> > > >8 அணு = 1 தேர்த்துகள்
> > > >8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை
> > > >8 பஞ்சிழை = 1 மயிர்
> > > >8 மயிர் = 1 நுண்மணல்
> > > >8 நுண்மணல் = 1 கடுகு
> > > >8 கடுகு = 1 நெல்
> > > >8 நெல் = 1 பெருவிரல்
> > > >12 பெருவிரல் = 1 சாண்
> > > >2 சாண் = 1 முழம்
> > > >4 முழம் = 1 கோல் அல்லது பாகம்
> > > >500 கோல் = 1 கூப்பீடு
> > > >4 கூப்பீடு = 1 காதம்
> > > >
> > > >பரப்பளவு:
> > > >
> > > >144 சதுர அடி = 1 குழி
> > > >100 குழி = 1 மா
> > > >20 மா = 1 வேலி
>
>
>
>---------------------------------------------------------------------------------
>For archives click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>---------------------------------------------------------------------------------
>
>
>
>
>
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>