> தூணிலிருக்கிறானா?" என்று
இரணியன் கேட்க அதற்குப் பிரகலாதன் பதிலுரைக்கையில்:
பதிலுக்குப் பகரமாக நல்ல தமிழ்ச்சொல் இல்லையா? :-)
>
> சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
> கோணிலும் உளன் மாமேருக் குன்றிலும் உளன் இந்நின்ற
> தூணிலும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
> காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்
>
> என வருகிறது.
>
> ஒரு அணுவை நூறு பங்காகக் கூறிட்டால் அதில் ஒரு பங்கு கோண் என்று சொல்கிறது
>இப்பாடல். தமிழில் இருந்த அளவையா? (வால்மீகியிலிருந்தும் இதைக் கம்பன் பெற்றிருக்க
>முடியும், அதனால்தான் இந்த வினா)
ஐயத்திற்குரியதே.
வால்மீகியில் கற்பனையும் நயமும் கொஞ்சமும் குறைவுதான்.
அதைப் படித்தால் ஏதோ ஒப்பிப்பதுபோல் இருக்கிறது.
சார்சு ஆர்ட்டும் வால்மீகியின் நடை கம்னைபோலவோ காளிதாசன் காலத்து வடமொழிக்
கவிதைகள் போன்றோ நயமில்லாத்து என்று தான் எழுதுவார்.