From nswaminathan@... Wed Mar 13 14:38:03 2002
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 13 Mar 2002 22:38:03 -0000
Received: (qmail 62270 invoked from network); 13 Mar 2002 22:38:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 13 Mar 2002 22:38:02 -0000
Received: from unknown (HELO orngca-mls02.socal.rr.com) (66.75.160.17) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Mar 2002 22:38:02 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls02.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id g2DMa3o02933; Wed, 13 Mar 2002 14:36:03 -0800 (PST)
Message-ID: <00ad01c1cadf$80c9a160$a1bd1b42@...>
To:
Cc:
Subject: pathigam on Sri Kapilaranyeswarar of Malibu hills
Date: Wed, 13 Mar 2002 14:36:22 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 16656

அமெரிக்காவில் உள்ள கலிபோர்நியா
மானிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில்,
மலிபு மாலைச்சாரல் அருகே
உள்ள சிவனுக்கு கபிலாரண்யேஸ்வரர் என்ற பெயர்,
அம்பாள் கற்பகாம்பிகை.

யாழ்ப்பாணம், ஏழாலை பண்டிதர் மு. கந்தையா அவர்கள்
2001 ல் இயற்றிய கலிபோர்னியா மலிபு மலைச்சாரல் மேவும்
கற்பகாம்பிகை உடனுறை கபிலாரண்யேஸ்வரர் தோத்திரப்
பதிகம் பின் வருமாறு.

('நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்ப'எனத்தொடங்கும்
திருஞான சம்பந்தர் அருளிய திரிகோணமலைப் பதிகம்
போல இதுவும் புறநீர்மைப் பண்ணில் அமைந்தது.)




உலகிதன் முதலாய் உயிர்களுக் குயிராய்
உம்பரும் இம்பரும் ஏத்தக்
கலிகெடு கடலார் கலிபோனி யாசேர்
காதல்செய் அடியர்கண் விளக்காய்
மலிபுநன் மலைசார் மலர்ப்பொழில் நடுவண்
மாதுகற் பாம்பிகை உடனாம்
ஒலிபுனற் கங்கைச் சடையாய் அடியேன்
ஊழ்வினைத் துயர்தவிர்த் தருளே.

பரிவுறு மடியார் பத்திமைக் கூரப்
பரிதிவா ரந்தொறுங் குழுமி
விரிவுறும் ஆகம விதிமுறை பேணி
விசேடார்ச் சனைபல் நிகழ்த்தி
அரஹர முழக்கோ டணைந்துநின் றேத்த
அவர்க்கருள் அண்ணல் எம்பெருமான்
தெரிவரு பிணியால் தியங்கிடு மடியேன்
தீவினைத் துயர்தவிர்த் தருளே

பதிமா தாமர்செம் பவளநன் மேனிப்
பாசுப தாபரஞ் சுடரே
வேதியா விகிர்தா விமலமெய்ஞ் ஞான
வித்தகா பக்தவத் சலனே
ஓதியுன் நாமம் உருச்செபித் தயர்வார்க்
குவந்தருள் புரியுநின் இறைமை
நிதியால் அடியேன் நிலைகெட உடற்றும்
நீள்துயர் தவிர்த்தரு ளாயே

காவாமர் பொழிலிற் குளிர்நிழல் மகிழும்
கபிலா ரண்யேஸ் வரனே
தேவர்தம் தேவே திசைமலி புகழார்
திவ்விய ஞானமெய்த் திருவே
ஏவர்வல் வினையும் இயல்பறிந் தகற்றும்
இன்பகா ரணனெனும் இறையே
பாவமென் றறையேன் பலநாள் உழலும்
படுதுயர் களைந்தரு ளாயே

என்னுயிர்க் குயிராய் என்னுள்நின் றியற்றும்
நின்செயல் என்செய லாக்கி
மன்னுமென் மூல மலங்கெடுத் தருள்நின்
மறக்கரு ணையதன் மயக்கால்
என்னது யானென் றியான்செய்த வினைகட்
கேதில னாகியின் றுழல்வேன்
நீனரு ளாலிது நீங்குதல் சரதம்
நினைந்தெனக் கருள்புரி வாயே.

குயிலார் பொழிலிற் குளிமது மாந்திக்
கோலவண் டிசைபயில் இம்பர்க்
கயிலா யம்மெனக் காண்வரு மெழிலார்
மலிபுமால் வரையிடங் கொள்வாய்
கபிலா ரண்யேஸ் வரகனங் குழையார்
கற்பகா பிகைமகிழ் பாகா
அயிலார் சூலம் ஏந்திநின் அடியேன்
அருவினைத் துயர்தவிர்த் தருளே.

சைவரென் றுள்ளார்க் குய்வகை அருள்வோன்
சங்கரன் சிவனவ னல்லால்
தெய்வமொன் றில்லை என்றுயர் சைவத்
திருமுறை அனைத்தும்நன் குணர்த்தும்
அவ்வகை நின்மேல் ஆழ்ந்தபற் றுடையேன்
அயலொரு தெய்வமிங் கறியேன்
எவ்வகை யேனும் என்பொருட் டிரங்காய்
என்துயர் களைந்தரு ளாயே.

செய்குவிப் பவற்கலாற் செய்வினை துயர்தீர்
தகுதிவே றியார்க்கிமிங் கில்லை
உய்வகை யெனுள்நின் றெலாஞ்செய்வித் தருளும்
உனதிலாங் கூதிய மில்லை
சைவமெய்ஞ் ஞானத் தகவிது தேர்வேன்
சதாநினைந் துனைத்துதித் துயர்வேன்
தெய்வநா யகனே செய்வகை அறியேன்
தீவினைத் திரிக்கறுத் தருளே.

அப்பர்க்குச் சூலை ஆலால சுந்தரர்க்
கரும்பிணி பலவும் தீர்த்தருளி
மெய்ப்பொருள் நீயெனும் மேதக விந்த
மேதினி யுணர்வுறச் செய்தாய்
செப்பரும் புகழார் மலிபுமா மலையிற்
சேர்தரும் என்னுயிர்க் குயிரே
எப்பரி சாயினும் எனைத்திரு வுளங்கொண்
டென்துயர் தவிர்த்தரு ளாயே.

தேனுமின் னமிழ்தமு மாமெனத் தேக்கத்
தித்திக்கும் நின்னருள் மகிமை
ஞானமெய்ப் புலவோர் நவில்வுறக் கேட்டே
நானுமுன் அருள்விழைந் தடைந்தேன்
நானுமவ் வருளுக் கருகதை யுடையேன்
நாமஅஞ் செழுத்துணர் வொழியேன்
ஊனமென் னுயிரும் ஒழுங்குற வாட்டும்
உறுபிணி தவிர்த்தரு ளாயே.