From ganapathi s@... Fri Mar 15 11:32:39 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 15 Mar 2002 19:32:38 -0000
Received: (qmail 51506 invoked from network); 15 Mar 2002 19:32:38 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 15 Mar 2002 19:32:38 -0000
Received: from unknown (HELO mailweb21.rediffmail.com) (203.199.83.145) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 15 Mar 2002 19:32:37 -0000
Received: (qmail 22465 invoked by uid 510); 15 Mar 2002 19:28:40 -0000
Date: 15 Mar 2002 19:28:40 -0000
Message-ID: <20020315192840.22464.qmail@...>
Received: from unknown (12.235.81.17) by rediffmail.com via HTTP; 15 Mar 2002 19:28:40 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Ramanar
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Madhurabarathi"
Reply-To: "Madhurabarathi"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 16700


விதியை வெல்ல அல்லது அதிலிருந்து விலகி நிற்க இஇரண்டு வழிகளே உண்டு. யாருக்கு விதி என்று விசாரித்து ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என்று அறிதல் ஒன்று. இஇறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைதல் மற்றொன்று.

---பகவான் ரமணர்

ராஜஸ குணமென்பது செயல்படவேண்டுமென்ற வெறி, தமோ குணமோ இஇருளும் மடிமையும். இவ்விரு குணங்களையும் நெறிப்படுத்துவதன்மூலம் சத்துவ குணத்தை வளர்க்கலாம். சத்துவம் வளர, வளிவீசாத அறையில் நிமிர்ந்து நிற்கும் விளக்குச் சுடர் போல மனம் நிலைபெறும். சாத்துவிகமானவன் மனவொருமைப் பட்டுத் தவம் செய்வான். எளிதில் சமாதிநிலையும் அடைவான்.

---பதஞ்சலி யோகசூத்திரம் (II-18) விளக்கத்தில் சுவாமி சிவானந்தர்

-------

ரமண மகரிஷி - 12
========

தமக்குத் துன்பம் தர முயன்றோரிடத்தும் பகைமை பாராட்டாதவர் ரமணர் எனப் பார்த்தோம். இன்னும் சில சம்பவங்கள்:

கீழ்க்குணங்களைச் சுட்டெரிக்காது அவம் மேற்கொண்ட சன்னியாசிகள் ரமணருக்கு ஊறு விளைவிக்க முற்பட்டதுண்டு. வயதான சாது ஒருவர் இஇளம் ரமணரிடம் அருகிருந்த குருமூர்த்தத்தில் இஇருக்கும்வரை மரியாதையாக இஇருந்தார். பின் ரமணர் விரூபாக்ஷர் குகைக்கு மாறினார். அப்போதும் ஒவ்வொருகால் ரமணர் பெரியவர் முன்னிலையில் சென்று நிஷ்டையில் அமர்வதுண்டு. விரூபாக்ஷர் குகைக்கு இஇளையமுனியைப் பார்க்க நிரம்ப பக்தர்கள் வருவது பெரியவருக்கு உறுத்தத் தொடங்கியது.

ரமணரைக் கொல்லவோ அன்றி அச்சுறுத்தவோ எண்ணி அவர் பல செயல்கள் செய்யத் தொடங்கினார். இஇருட்டியபின் மலையில் ரமணர் இருக்கும் இஇடத்துக்குச் சற்று மேலே சென்று பாறைகளை உருட்டி விடுவார். பகவான் சற்றும் அசையாது அமர்ந்திருப்பார். ஒரு கல் ரமணருக்கு மிக அருகில்கூடவந்ததுண்டு. விழிப்பான ரமணர் விரைந்து ஒருமுறை பெரியவரைக் கையும் களவுமாகப் பிடித்தபோது, பெரியவர் வெறும் விளையாட்டுத்தான் என்று சொல்லி மழுப்பினார்.

இஇந்த முயற்சியிலெல்லாம் தோற்ற பெரியவர் பாலானந்தா என்ற கபட சன்னியாசியைத் துணைகொண்டார். வசீகரமும்நல்ல கல்வியும் கொண்ட பாலானந்தா சன்னியாசி என்ற பெயரில் பலரை ஏய்த்து வந்தார். ரமணரின் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணிய அவர் "இஇவன் என் சீடன்", "குழந்தைக்கு இஇனிப்பு வாங்கி வாருங்கள்", "இஇந்தா குழந்தே வெங்கட்டராமா, இஇனிப்பு வாங்கிக்கோ" என்றெல்லாம் நடிப்பார். ஊருக்குள் போய்த் தானே "சிஷ்யனுக்காக" தின்பண்டங்கள் வசூல் செய்வதும் உண்டு. எவ்வளவு ஆணவமென்றால் ஒருமுறை ரமணருடன் தனிமையில் இஇருக்கையில் "நான் உன் குரு என்று சொல்லிப் பணம் வசூலிப்பேன். உனக்கெதுவும் நட்டமில்லை, சும்மா இஇரு" என்றாராம்.

பகவான் தெய்வீகக் கடல். இஇவரை மறுப்பதில் தன் சக்தியை விரயமாக்குகிலார். ஆனாலும் பாலனந்தர் கொட்டம் அடங்கியது.

அது பெரிய கதை...

கருணைக்கடலில் பின்னும் மூழ்குவோம்.

அன்புடன்

மதுரபாரதி