From rangabashyamp@... Thu Mar 21 08:14:41 2002
Return-Path:
X-Sender: rangabashyamp@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: unknown); 21 Mar 2002 16:14:40 -0000
Received: (qmail 73009 invoked from network); 21 Mar 2002 16:14:40 -0000
Received: from unknown (66.218.66.218) by m10.grp.scd.yahoo.com with QMQP; 21 Mar 2002 16:14:40 -0000
Received: from unknown (HELO n14.grp.scd.yahoo.com) (66.218.66.69) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 21 Mar 2002 16:14:40 -0000
Received: from [66.218.67.165] by n14.grp.scd.yahoo.com with NNFMP; 21 Mar 2002 16:14:40 -0000
Date: Thu, 21 Mar 2002 16:14:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: First Introduction is the best...
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1156
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "rangabashyamp"
X-Originating-IP: 24.47.165.141
X-Yahoo-Group-Post: member; u=23648154
X-Yahoo-Profile: rangabashyamp
X-Yahoo-Message-Num: 16727


அகத்தியர் குழாமின் அறிஞர் பெருமக்கட்கு,

சான்றோர் பலர் அலங்கரிக்கும் யிந்த அகத்திய சபையில் யின்றுமுதல்
உறுப்பினராகி எழுத விரும்பியுள்ளேன். அகத்தியர் குழாமில் எனது
பிரவேசம், உங்களது வாழ்க்கையில் எந்த விதமான சலனத்தை
ஏற்படுத்தப் போகிறதோ, எல்லாமே பொம்மைகளாகிய நம்மை
ஆட்டிப்படைக்கும் அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
ஆண்டவன் கட்டளையை மீற நமக்கு வலியேது?

சபையில் புதிதாக நுழைந்திருப்பதால், எப்படி ஆரம்பிப்பது என்று
கொஞ்சம் கூச்சமாக யிருக்கிறது. 'உண்மையிலேயே நல்லவன்'
என்று ஆரம்பத்திலிருந்தே எப்படி பேர் வாங்குவது என்று, ஏற்கனவே
யிங்கே நல்ல பெயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் சீனியர்கள்,
எனக்கும் சில குறிப்புக்கள் சொல்லி, தங்களது அனுபவத்தைப்
பகிர்ந்துகொண்டால், ரொம்ப நன்றியுடையவனாக யிருப்பேன்.

நல்ல பெயர் வாங்கத் தவறியவர்கள், எங்கேயெல்லாம் கோட்டை
விட்டீர்கள் என்று எழுதுவதிலும் தப்பில்லைதான்.

பழைய கதையை எல்லாம் மறைத்துவிட்டு, ஒருவன் திடுதிப்பென்று
புதிய சபையில் பிள்ளையார் சுழி போட்டு, நம்பிக்கையுடன் புதிய
அத்தியாயம் தொடங்குவதில், தங்கள் எல்லோருக்கும் சம்மதம்தானே.

தங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும் யிந்த ஏழைக்கு ஆண்டவன்
அருள்பாலிப்பாரா?

ரொம்ப டென்ஷனில்
மணி சுவாமிநாதன்