நன்றுடையானைத் தீயது இல்லானை நரைவெள்ளேறு
ஒன்றுஉடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.
சிராப்பள்ளிச் செல்வமே! தீயது சிறிதும் இன்றி
நன்மையொன்றையே உடையவனே! முதிர்ந்த வெள்ளை
இடபத்தின் மேலேறி வந்தருளும் சடையனே!உமையை ஒரு
பாகத்திற் கொண்டு அர்த்தநாரியாகக் காட்சிதரும் பெருமானே!
பிறரால் சென்றடைய முடியாத மேலான வீடு பேறாகிய
செல்வத்தை அருள வல்ல செல்வமே! திருச்சிராப்பள்ளியில்
எழுந்தருளியுள்ள தாயுமானவப் பெருமானே! உன் உலப்பிலா
ஆனந்தம் பெருகுகின்றது.