From suganjb@... Sun May 26 06:39:15 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 26 May 2002 13:39:15 -0000
Received: (qmail 63728 invoked from network); 26 May 2002 13:39:15 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 26 May 2002 13:39:15 -0000
Received: from unknown (HELO smtp5.jaring.my) (61.6.32.55) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 26 May 2002 13:39:14 -0000
Received: from user (j23.spt.jaring.my [161.142.105.217]) by smtp5.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4QDdBY17267 for ; Sun, 26 May 2002 21:39:11 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020526213557.006d8e10@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 26 May 2002 21:35:57 +0800
To: "agathiyar@yahoogroups.com"
Subject: Elley Ram's Kavidhai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18262


அன்பர்களே,

நாக கணேசன் மடலில் குறிப்பிடப்பட்டிருக்கும்
எல்லேய் ராமின் கவிதைத் தொகுப்பாகிய 'ப்ரியசகி'
நூலில் காணப்படும் 'இன்றைய பிராமணன்' என்னும்
கவிதையைக் கீழே காணலாம்.

நாக கணேசன், எல்லேய் ராம் ஆகிய இருவரின்
கருத்துக்களிலிருந்தும் நான் மாறுபடுகின்றேன்:-)
என்னுடைய கருத்துக்கள் வேறு.

அவை ஒரு பக்கம் இருக்கட்டும்.

சண்டை கிண்டை போடாமல் இரண்டையும் கவனியுங்கள்:-)

அன்புடன்

ஜெயபாரதி

----------------Typed and Forwarded by JayBee--------

இன்றைய பிராமணன்

'வேதம் படித்தவன்
விவேகம் நிறைந்தவன்
ஓதாமல்
ஒருநாளும் இல்லாதவன்
சதா
பரம்பொருளைப் பாடுபவன்'

'மோட்சத்தை நாடுபவன்
அட்சய பாத்திரத்தோடு
உஞ்சவிருத்தி செய்து
பஞ்சத்தைப் போக்குபவன்'

'யோக சேமத்துக்காக
யாகம் செய்பவன்
சரணாகதி தத்துவத்தை
தரணியெல்லாம் சொல்லித் தந்தவன்'

'கொன்றதும் தின்னாமல்
கன்றையும் பசுவையும்
தாயெனப் போற்றியவன்
மாயவலையில் விழாதவன்'

'முனிவனாய் நல்லாசிரியனாய்
கனியிருப்பக் காய் கவராமல்
தனி ஒரு நீதி வளர்த்தான் -- தர்மமே
மனு எனப்பெயர் கொடுத்தான்'

'கங்கையிலும் காவிரியிலும்
பாவங்களைக் கழுவினான்
ஆங்காங்கே கோயில்களை எழுப்பி
இந்து மதத்தை நிலைநிறுத்தினான்'

இப்படித்தான் பிராமணன்
ஒருகாலத்தில்
இங்கே வாழ்ந்து வந்தான்
கலியின் கொடுமையினால்
தானோ என்னவோ
பலியாகிவிட்டான்
வழுக்கி விழுந்து விட்டான்

ஆண்டாண்டைக் கட்டிக்காத்த
தன்மையை விட்டுவிட்டான்
கண்மூடித் திறப்பதற்குள்
சண்டாளனாய் மாறிவிட்டான்
பெண்டாளக் கிளம்பிவிட்டான்

தர்மத்தின் காவலன்
புரவலவரைப் பாடும் புலவன் -- இங்கே
எருமைத் தசைத் தின்கின்றான்
கருவையே கலைக்கின்றான்

ஊதாமல் ஒருநாளும் இருப்பதில்லை
மது இல்லாமல்
மதி வேலை செய்வதில்லை
சதிகாரனாய் ஆய்விட்டான்

கோபத்தில்
சத்திரியனையும் மிஞ்சிவிட்டான்
காசு சேர்ப்பதில்
வைசியனையும் பின் தள்ளிவிட்டான்
ஆத்திரம் கொண்டிங்கே பிராமணன்
சூத்திரனையும் சேர்த்திங்கே
அழித்துவிட்டான்

நல்வாழ்க்கை முறை ஒன்றாலேயே
பலசாலியாய் வாழ்ந்த பார்ப்பனன்
குலதர்மம் விட்டுவிட்டான்
பலாபலன்கள் பார்ப்பதை
நிறுத்திவிட்டான்

ஆசிரியனாய்
அனைவர்க்கும் சொல்லித்தந்த
பிராமணன்
சிரிப்பாய்ச் சிரித்து
நெருப்பில் விழுந்துவிட்டான்

அக்னி ஹோத்ரம் செய்து வைத்தான்
அனைவர்க்கும் ஒருகாலம்
அக்னியில் மாட்டைச் சுட்டு
தின்கின்றான் இக்காலம்

ஐயரெல்லாம் மெய்ஞானி
என்றிருந்தது போய்
பொய்யரென்ன்றும் புலையரென்றும்
பெருங்காயம் வைத்த
வெறும் பாண்டமென்றும்
அலைகின்றார் இன்று
ஐயோ பாவம்!

பஞ்சகச்சம் வைத்துக்கட்டி,
அஞ்சி அஞ்சி நடந்து
வேதம் ஓதி
விதி பற்றி பயந்திருந்த பிராமணன்
கஞ்சிக் கவலையினால்,
காமத்தால், காசுமோகத்தால்
எஞ்சியிருந்த எல்லாப் பண்புகளையும்
காற்றில் பறக்கவிட்டான்

நதிக் கரையில் விதி பற்றி சர்ச்சை செய்து
கதி பற்றி
காம்ய மோட்சம் பற்றிக்
கவலைப் பட்ட பிராமணன்
சதி செய்து கெடுக்கின்றான்
தீ மதி பெற்றுத்
திரிகின்றான்
துதி செய்து வாழ்கின்றான்
துஷ்டர்களை மட்டும்

================================