From netranger@... Fri May 31 21:46:15 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 04:46:15 -0000
Received: (qmail 17044 invoked from network); 1 Jun 2002 04:46:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m15.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 04:46:15 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 04:46:14 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 1 Jun 2002 10:22:14 +0530
Received: from 202.9.169.1 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Sat, 01 Jun 2002 10:24:20 +0530
Message-ID: <3CF84E72.5D9BC89F@...>
Date: Sat, 01 Jun 2002 10:02:50 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: ஒளவைக்குறள் - (11-20)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 01 Jun 2002 04:52:14.0718 (UTC) FILETIME=[194661E0:01C20928]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18368

2.உடம்பின் பயன்

11. உடம்பினைப் பெற்றா பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.

இந்த மனு உடலைப் பெற்றது இதற்குள் கடவுளைக்
காண்பதற்கேயாம்.

12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார்.

அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை
(இவ்வுடம்பில்) உணர்வதே இவ்வுடம்பு எடுத்ததின் பயன்
என்றறிவர்.

13. ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.

(தரும் - இக பரத்தைத் தரும்; சங்கரனை -
தீமைகளையும்,அல்லன என்று ஒதுக்கப்பட்ட கூடாதவகளையும்
சம்கரிக்கும்(அழிக்கும்) அரனை; ஒரு பயன் - ஒப்பற்ற
தனிப்பெரும் பயன்)
"நாதமுடிவிலே நல்லாளிருப்பது
நாதமுடிவிலே நல்யோகமிருப்பது
நாதமுடிவிலே நல்ஞானமிருப்பது
நாதமுடிவிலே நஞ்சுண்ட கண்டனே" - திருமந்திரம்
என்றும் "சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி" என்றும்
ஆன்றோர்கள் கூறியிருப்பதால் தேகத்திலுறையும்
(மெய்யில்+உறையும்) தெய்வத்தை ஆதியாகிய
விந்துநாதமாகிய ஒலியால் உணர்ந்து அறிவதே மனுவுக்கு
அளிக்கப்பட்ட ஒப்பற்ற பயன்.

14. பிறப்பினற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.

(தூ - பரிசுத்தமாகிய; நெறிக்கண் - வழியின்
மூலமாக; துறப்பதாம் - மும்மலங்களாகிய,
ஆணவம்,மாயை,கன்மம் ஆகியவற்றிலிருந்து நீங்கி
இருத்தலாகும்)

பரிசுத்த வழியில் சென்று எல்லாவகயான இச்சைகளையும்
வெறுத்து ஒதுக்குவதே பிறப்பினால் பெற்ற பயன்.

"துறவு" என்பது மும்மலங்களிலிருந்தும், இகபர
போகங்களில் மனத்தை அலையவொட்டாது, சகல
வாழ்க்கையிலும் அவைகளை எட்டிக் கனிபோல கசப்புத்
தோன்றும்படி வெறுத்து ஒதுக்குவதாம்.

"ஒகானூ பீஹி மினுஸ் ஸாஹிதீன்" (புனித குர் - ஆன்
- 12 - 12)
அவர்கள் சாதனையால் (அல்லாவையன்றி ஏனையவைகளை)
வெறுத்துவிட்டார்கள்.
உலகத்தையும் - அதன்
போகங்களையும்(தவாபு),சுவர்க்கத்தையும்,அதன்
சுகங்களையும்(நிகுமத்து) நினைத்தாலே அசுத்தம்(முழுக்கு)
உண்டாகிவிடும்.

15. உடம்பினா லன்றி உணர்வுதா நில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.

(உன்னியது - வெளிப்படுதல்)
ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களின் மூலமாக ஏற்படும்
செயல்களினாலேயே உடலில் ஓங்காரமானது(அறிவு)
ஏற்படும். உடலில்லையேல் உணர்வில்லை.

16. மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.

(கொள்கை - கட்டுப்பாடு)
மூல மலங்களாகிய(அல்லன-விலக்கப்பட்டவை) அழுக்குகள்
நீக்கும் கட்டுப்பாடு மனத்தில் அடைந்து
ஆநந்தமடைந்துவிட்டால், எல்லாம் வல்ல ஈசனை உடம்பே
சுட்டிக் காட்டிவிடும்.

17. ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு.

(நேசத்தாலாய - ஞானேந்திரிய,கர்மேந்திரிய
ஒற்றுமைகளினால் உண்டாகிய; உணர்வுகள் - அறிவும்
அறிவின் தொடர்புடையவைகளும்;)
ஞானேந்திரிய,கர்மேந்திரிய ஒற்றுமைகளினால்
உண்டாகிய உடல், சப்தத்தினால்(ஜபதபங்கலால் உண்டாக்கும்
ஒலி அலைகளினால்) அறிவு முதலிய அரூபங்களப்
பார்த்துணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.

18. உயிற்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.

(அயிர்ப்பு - சந்தேகம்) சந்தேகம் தீர்ந்தால்
சன்(ஒளிபெற்ற)+தேகம் கிடைக்கும்.
உடலிலுள்ள பஞ்சேந்திரியங்கள், மூலாக்கினி,
சூரியசந்திரன்,பி(வி)ந்துநாதம், இவைகளின் கலைகளை
எழுப்பி, சீவனிடத்தில் சமர்ப்பித்தால்,
சீவப்பிரகாசத்தோடு கலந்து, அறிவுக்குப் பலத்தை
கொடுக்கும். கலைகளை எழுப்ப, பார்வையையும் மனத்தையும்
ஒன்றுகூட்டி ஒழிவில்லா இலக்குடன் உச்சியை நாடவேண்டும்.

ஆதி - ஆதீ - ஆ+தீ - ஆன்மாவாகிய தீ - ஆன்ம
அக்கினி
சந்தேகதிற்கிடமின்றி ஆதியை நாட உயிருக்குறுதி -
இதுவே உடலின் பயன்.

19. உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.

ஈசனை உறுதிபடத் தேடுவதற்காகவே உடல்
கொடுக்கப்பட்டுள்ளது.

20. அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.

ஆண்களுக்கு அன்னத்தினால் விந்தும், பெண்களுக்குச்
சுரோணிதமும் உண்டாகிறது. இவையிரண்டுங்கூடித்தான்
இன்னுமொரு உடல் எடுக்கிறது. ஒரு சவத்திலிருந்து
இன்னுமொரு சவம் வெளிவருதலால் அதற்குப் பெயர்
"பிர+சவம்". இவகளையுண்டாக்கியது (நாதகலைகள்)
அன்னமே.இப்படிப்பட்ட உடல் செம்மை (செம்+மெய்) ஆனால்,
அவைகள் நம் முன்னோனாகிய இறைவனக் காட்டிவிடும்.

- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழ்நாடு)
-netranger@...