ஊன்றிப்பார்ப்பதனால்(perception)
உண்டாகும் சூக்கும உடலில்
உண்டாகும் அறிவாலுருவாகும் உணர்வினால் எல்லாவற்றையும்
கற்கலாம்,
கேட்கலாம், அறிவுக்கண்ணால் பார்க்கலாம்.
இவ்வத்தியாயத்தில்,
உடலென்பது சூக்கும உடலேயாகும்.
இத்தகுதியை அடைந்தவர்கள் மறைகளில் இருக்கும் சாத்திரப்
பூட்டுக்களை
உடைத்துப் பொருள் காணமுடியும், மர்மங்களையும்
அறியமுடியும்.
தூல உடல் எப்படி உள்ளதோ, அதைப் போல சூக்கும
உடலைக் கண்டால்
எப்படியிருக்குமென்றால், வெள்ளியாகிய சுக்கிலத்தின்
நிறத்தையும் நாதத்தின்
பொன் நிறத்தையும் பொருந்தி இருக்கும்.
23. சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.
சூக்கும உடலானது, சங்கல்பித்துள்ள இடங்களுக்குச்
சென்று,
அவ்விடங்களில் உள்ளவற்றைக் கிரகித்துக் கொண்டு
தூலத்திற்க்குத் திரும்பி
வந்து திரிந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட சூக்கும உடல்
தூல
உடலைப்போல் அழிவதில்லை.
24. வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
சூக்கும உடலானது வேண்டிய பலனை அடைந்து,
ஆநந்தித்து மகிழ்வதோடு,
சுவாலையுடன் கூடிய ஒப்புயர்வற்ற பிரணவத்தில் நிலைத்து
நிற்கும் படியான
பலனைக் காட்டும் (வெளிப்படுத்தும்). ஓங்காரத்தின்
பயனாவது எல்லாத்
தத்துவங்களையும்(உண்மை, (உள்+மெய்)) காட்டி
இராப்பகலற்ற
சிதாகாயத்தில் அணைந்து நிலைத்து நிற்பதே.
எல்லாப் பொய்கட்கும் ஆதாரமாயுள்ள தூல உடலுக்குள்
இருக்கும் சூக்கும
உடல் மெய்க்கு ஒரு வித்தாக உள்ளது. ஞானகர்மத்திற்கு,
இந்திரியங்கள்
ஆசையற்று நின்று சூக்கும உடலையடையும். தூல உடலில் உள்ள
இந்திரியங்கள் ஞானவிரோதமாக கிளர்ச்சி செய்யும்
ஆகையால்
"பொய்க்கெல்லாம் பாசனம்" என்றார்.