From jaybee@... Thu Jun 13 05:14:38 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 12:14:38 -0000
Received: (qmail 48227 invoked from network); 13 Jun 2002 12:14:38 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 12:14:38 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 12:14:37 -0000
Received: from user (sp-103-38.tm.net.my [210.186.103.38]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXN00NB38O95A@...> for agathiyar@yahoogroups.com; Thu, 13 Jun 2002 20:14:36 +0800 (SGT)
Date: Thu, 13 Jun 2002 20:14:43 +0800
Subject: AwwaikkuRaL(81-90)
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: netranger@...
Message-id: <3.0.3.32.20020613201443.0076d6ec@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: Gnanavettiyan by way of jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18595
Subject:
awwaikkuRaL(81-90)
Date:
Thu, 13 Jun 2002 11:56:47 +0530
From:
ஞானவெட்டியான் To:
agathiyar@yahoogroups.com
ஒளவைக் குறள் (81 - 90)
9. உள்ளுணர்வு
உள்ளுணர்வாவது அறிவாகிய பிரணவத்தின்
சக்தியைக்கொண்டு யாவற்றையும் அறியும் தன்மை.
81. எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.
கணக்கற்ற முறை அசைவற்ற தன்மையை உண்டாக்கித்
தவமியற்ற, அசைவற்ற நிலைமை ஏற்படுமிடமாகிய
இருதயகமலத்தில், சிவத்தை நிலைபெற்ற தன்மையுடன்
அடைந்ததே அறிவின் சக்தியாம்.
ஆக, தவத்தின் மூலமாய் அசைவையொழித்து, சிவத்தை
இருதயகமலத்தில் நிறுத்த அறிவுக்கு அளவற்ற
சக்தியுண்டாம்.
ஊழி என்பது பஞ்சபூதங்கள் மறையுங்காலம். பஞ்சபூதத்தின்
சூக்குமமாகிய உடலுக்கு ஊழிக்காலம் மரணம்.
ஞானகர்மத்துக்கு ஊழிக்காலம் மனோநாசமே. உணர்வு என்பது
அறிவின் சக்தியை விவகார தசையில்பிரயோகித்தலே
யாம்.
வாசிட்டம்:
"தெரி பொருளுந் தரிசனமுஞ் சேரும் போதில்
சேர்ந்த சுகமறிவு மிகச் சிறந்ததாகும்." எனவும்,
"உள்ளும் புறமும் அசைவின்றி உயிர்மன்னு மடங்கு மெனிற,
றள்ளுறாமலொருக் காலுந் தாதுவெல்லாஞ் சடத்துறையும்"
என்றும்,
வாசிட்டம் - புசுண்டர் கதையில்:
"இனையயாரு மிந்தவறிவு யிறவா திருக்க வீதறிய,
வினயமின்றி மிகச்சேர்ந்தார் வீணர் செருக்குமிகுமுரப்பு,
முனையில் வின்னா ணோசையைப் போன்மூடர்
கேட்பதிறப்பதற்கே,
யனையர் வீணாட் கழிப்பதலா லறியா வறிவை
யறியாரே."
எனக் கூறியிருத்தல் காண்க.
82.பல்லூழி காலம் பயிறனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.
நன்மையைய் கொடுக்கும் அறிவானது அடைந்த நன்மை, பல
முறைகளாக அசைவற்ற மனத்துடன் சிவத்தை அருச்சித்து
சிவவொளிவை அடைந்ததே.
83.எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.
உணர்வாகிய அறிவானது தவத்தினாலல்லாது வேறு
விதத்தால் பூரணமடையாது.
84.முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.
பிறப்பு - உடல்
முன்னர் முயன்று தவத்தால் ஏற்றிய அகத் தீயால்தான்
உணர்வாகிய அறிவு பூரணம் பெறும்.
அதாவது, முதலில் தவத்தைச் செய்து அதனாலுண்டாகிய
சக்தியை உணர்வாகிய அறிவு அடையும்.
'முன்னை', 'பின்னை' என்பதை முன்சென்மம்,பின்சென்மம்
என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. இத் தேகமெடுத்து என்ன
பயன்? இதிலுள்ள அறிவின் கதியென்ன?