நிலந்தணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கோற் சோழனாகச்செய்தான் ஊர்
அலந்த அடியானற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
நிலம் நீர் முதலாகிய ஐம்பூதங்களாய் விளங்கும்
அண்ணலே! பிறவிப் புண்ணியத்தால் சிலந்தி யொன்று தன்
வாய்நூலால் உனக்குப் பந்தரிட்டு வழிபட, அச்செயலுக்கு
மகிழ்ந்து அடுத்த பிறவியில் அதனைக் கோச்செங்கட்
சோழனாக அவதரிக்கச் செய்து, அவன் பணியால் மாடக்
கோயில்களை மகிழ்வுடன் ஏற்ற மணியே! அடியவர்கள்
நாடொறும் காலை மாலை வேளைகளில் மலரிட்டு வழி
பட்டுப் போற்றுகின்ற அரிசிற்கரைப் புத்தூரில் அமர்ந்துள்ள
தேவே!
எளியேனின் செயல்களையும் வழிபாட்டினையும்
சிவபுண்ணியச் செயல்களாக ஏற்றருளி அருள்வாயாக!
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.
[Non-text portions of this message have been removed]