From chand1945@... Mon Jun 24 10:06:08 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 24 Jun 2002 17:06:07 -0000
Received: (qmail 71143 invoked from network); 24 Jun 2002 17:06:07 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 24 Jun 2002 17:06:07 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 24 Jun 2002 17:06:06 -0000
Received: (qmail 22566 invoked by uid 7002); 24 Jun 2002 22:35:53 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 24 Jun 2002 22:35:53 +0530
Received: (qmail 22297 invoked by uid 7002); 24 Jun 2002 22:35:45 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.152) by webmail5.maa.sify.net with SMTP; 24 Jun 2002 22:35:45 +0530
Message-ID: <3D174F8D.4F61AB84@...>
Date: Mon, 24 Jun 2002 22:27:49 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: awwaikkuRaL(101-110)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18800

II.திருவருட்பால்.

1.அருள் பெறுதல்

101. அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.

அருளினால் மும்மலங்களாகிய கிரந்தித்திரயங்களை ஒழித்து அறிவாகிய
பிரணவத்தையும் நிலைப்படுத்திக் கொள்ளலாம்.
"அருள்' என்பது சிவம் வெளிப்பட்டு நிற்கையில் அதனிடத்திலிருந்து
வெளிப்படும் கலைகளே.
ஞானிகள் இல்லாதார் மும்மலங்களுடைய குணங்களையே
வெளிப்படுத்துகிறார்கள். அவை ஆணவம்,கன்மம்,மாயை ஆம். இம்மூன்றுக்கும்
மூலப்பொருள் முறையே ருத்திர கிரந்தி,விட்டுணு கிரந்தி, பிரம்ம
கிரந்தியாகும். மூலப்பொருள்களை விட்டு, குணங்களை ஒழிக்கப்
பார்க்கிறவர்கள் ஆகாயத்தை வெட்டப் பார்க்கிறவர்களேயாகும். ஆகையால்
கிரந்தித்திரயங்களை அடையாளம் கண்டு ஒழித்தல் வேண்டும்.
திருமந்திரம்:
"ஆணவமும் மாயையும் கன்மமும் மும்மலமும்
காணும் முளைக்குத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டு லமாய் நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே."

சிவஞான சித்தியார் :
"மும்மல நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவி நுண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போகபந்த போத்திருத் துவங்க பண்ணும்
இம்மல மூன்றி னோடு மிருமல மிசைப்ப னின்னும்!"

102. இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.

மாயையாகிய பிரம்மகிரந்தியை நிலைப்பட்டமனத்தாலும் சிந்தனையாலும்
நீக்கிவிட்டால் சிவகலை சேர்ந்து வெளிப்பட்டு நிற்கும்.
பிரம்ம கிரந்தி - அஞ்ஞானம், இருள், அறிவின்மை
காமியம் - விட்டுணுகிரந்தி,உலகபோகம்,தீனி,யோனி,திரவிய
ஆசை
ஆணவம் - ருத்திரகிரந்தி, உலகப் பிரகாசம், ஞானப்பிரகாசம்,
உலகாங்காரம், ஞானாங்காரம் (இகத்துக்கும் பரத்துக்கும் சேர்த்து)

103. வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.

சத்தியம், சலனமற்ற மனம், பரிசுத்தம், ஆகியவைகளினாலேயே சிவ
அருளானது கலைவீச ஆரம்பிக்கும்.

104. ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.

ஓங்காரமாகிய பிரணவத்திற்குள் நிற்கின்ற சிவகலையை பெற்று
அடைந்தால், அச்சிவகலையினுள் பேரானந்தமாகிய இறைவன் இருக்கிறான்.

105. உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.

நிலைபெற்ற, ஒளியுடைய சிவகலையை அடைந்தால் நாம் நினைக்கும்
(பர)காரியங்களை முடித்துக் கொள்ளலாம்.

106. எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.

சிவனுடைய பழமையான மூலவித்தின் கலையை அறிந்தடைந்தால்
எப்பொருளையுமடையலாம். "எல்லாப் பொருளும்" என்றதால் பரப்
பொருளன்றி இகப்பொருளையும் அடையலாம் என்பது ஒரு சாரார் கருத்து.

107. சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.

சிவ உருவத்திலிருந்து வெளிக்கிளம்பும் அருட்கலையைப் பெற்றக்கால்
சிந்தையாகிய மனத்திலிருக்கும் பந்தபாசங்கள் நீங்கிவிடும்.
பந்தபாசத்தைத் தற்கால வேதந்திகள் ஒழிக்க வேண்டுமென்ற எண்ணத்தையே
மேற்கொண்டு மற்றவர்களையும் நம்பவைக்கிறார்கள். அப்படிப் பேசுவோர்
அதை ஒழித்துவிட்டதை வெளித் தோற்றத்தில் காட்டவில்லை. ஒரு
வேட்டியைக் குளிருக்குப் போர்வையாகப் பாவித்தால்கூட, அதைப்
பாதுகாக்க எண்ணம் உண்டாகும். ஆகையால் அது அவர்களால் முடியாதென்பது
திண்ணம்.
பட்டினத்தார் :
"ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே."
இந்நிலையடைந்தோரே பந்தபாசத்தை ஒழித்தவராவார்.

108. மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக்க் கால்.

சிவ அருளை ஒருவன் அடைந்தால் குற்றமற்ற அறிவானது சந்திர கலையின்
நிறமதாகவே தோன்றும். சிவகலையை அறியாவிடின் அறிவாகிய
பிரணவம் தோன்றாது. அறிவு தோன்றாவிடில் சிவகலையை
அறியமுடியாது. மனனம் ஒழியாவிட்டால் இரண்டையும் அறிய முடியாது.
இவ்விரண்டையும் அறியாவிடில் மனதையடக்க இயலாது. இதையே வாசிட்டம்
:
"இனைய மூன்றுஞ் சமமாக வியற்றா ரெம்மட்டம் மட்டு
மனைய பதமெய்தா வருடமாயிரங்கள் சென்றாலும்
வினையில் காலஞ் சமமாக மிகுநாளியற்றின் மிகப்பலிக்கு
நினைவி லொன்றொன்றா வியற்றில் நிலைகூடா நிட்பலமாகும்."


109. ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி.

அகார சத்தத்தினாலே கூறப்படும் சிவகலையை அடையச் செய்யவேண்டிய
ஞான வினைகளைச் செய்து வாவெனக் கூறி, அருட்கலையாம் சிவகலையை
அடைந்தவர்களுக்கு அறிவின் ஒளி தாவியெழுந்து வரும். செயல்
இல்லையெனில் அருள் இல்லை என்பது முடிபு.


110. ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.

மறைதலற்ற சிவ அருளையடைந்தால், குறைவில்லாக் குளிர்ந்த
இன்பமடையலாம்.

- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழ்நாடு)