> முதற்குறளில் அழகு, அலங்காரம் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகக் காரிகை
>வருவது சரிதான். இந்தக்
> கண்ணோட்டம் என்பது ஒரு வகையில் பார்த்தால் benevelont view என்று சொல்ல
>முடியும். நம்மை அருள்
> நிறைந்த முனிவர் பார்க்கிறார். நம்மை உற்றுப் பார்க்கிறார். இந்த உற்றுப் பார்த்தல்
>தானே
> inspection. அந்தப் பார்வை நம்மேல் குற்றம் சொல்வதற்கு இல்லை. நம்மைக் கனி
>வோடு பார்த்து நம்மை
> நல்வழிப் படுத்துவதுபோல ஒரு அணைத்துக் கொண்ட பார்வை. அதைத்தான் இந்தக்
>கண்ணோட்டம் என்ற சொல்
> உறுதிப் படுத்துகிறது.
மிக்க நன்றி ஐயா. அடியேன் எழுதியதும் அஃதே:
>>>>
What is KaNNottam? The very word sounds little strange to most of us,
as it is no more in vogue now. No doubt, the couplets on KaNNottam
are also not that easier to comprehend. I am yet to find one clear
explanation to the above verse.
Dwelling deep on these kuRaLs, one may come to a conclusion that
Valluvar talks about a sort of compassionate, motherly glance towards
all. It's a divinely saintly quality.
Forgiving even those to be punished from a compassionate viewpoint is
a real virtue.
>>>>
அரசனுக்கு வலியுறுத்தும், அரசியலில் வரும் இந்தக் குறட்பா சுட்டும் பொருளை
அதுசுட்டும் பிண்டத்தின் பண்பாக வேண்டிய அருட்பார்வையினை,
அண்டத்தின் சில வடிவங்களுடன் பொருத்திப்
பார்த்ததில் எழுந்ததே என் எண்ணவோட்டம்.
தங்களின் விளக்கங்களுக்கு மீண்டும் நன்றிகள்.
> யா மரம் நிறைந்து கிடந்த தீவு தான் உங்கள் யாவகம். யாவின்
> இன்னொரு பெயரான சால் என்பதை வைத்துத்தான் சாலி என்ற இன்னொரு பெயர்
> யாவகத்திற்கு வந்தது.)
நேரம் கிடைக்கையில் இது குறித்து மேலும் விரித்தெழுத வேண்டுகிறேன்.
என் முக்கியமான விண்ணப்பமொன்றை வைத்திருந்தேனே ஐயா!
குறள் 245.
அருள் ஆள்வார்க்கு அல்லலில்லை என்று காற்று சுழலும்
பூமி காதில் சொல்லும் பொருள்?;-)
தங்களின் விளக்கத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
குமார்
பிகு:
திரு.சந்திரர் எங்கோ யோகநிட்டையில் இருப்பது போல் உணர்கிறேன்.