From chand1945@... Mon Jul 01 09:21:23 2002
Return-Path:
X-Sender: chand1945@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 1 Jul 2002 16:21:11 -0000
Received: (qmail 36670 invoked from network); 1 Jul 2002 16:21:11 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 1 Jul 2002 16:21:11 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jul 2002 16:21:11 -0000
Received: (qmail 6025 invoked by uid 7002); 1 Jul 2002 21:50:50 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 1 Jul 2002 21:50:50 +0530
Received: (qmail 5600 invoked by uid 7002); 1 Jul 2002 21:50:31 +0530
Received: from unknown (HELO sify.com) (202.9.169.187) by webmail5.maa.sify.net with SMTP; 1 Jul 2002 21:50:31 +0530
Message-ID: <3D207ECB.15306848@...>
Date: Mon, 01 Jul 2002 21:39:47 +0530
X-Mailer: Mozilla 4.72 [en] (Win98; I)
X-Accept-Language: THAMIL,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Garudaa....Sugamaa?
References:
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: Njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=116500105
X-Yahoo-Profile: gyanavettiyaan
X-Yahoo-Message-Num: 18918

அளிமிகு நண்பர் திரு.கிஷோர் அவர்கட்கு,
வணக்கம்.
> நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக வரவழைத்து
> படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்ட தர்க்கவாதங்கள் சுட்டும்
> கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன்.
அந்த வலை உரல் தர இயலுமா?
நறுமையுடன்,
தவனமாய்,
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)
http://www.geocities.com/enjayan2000/index.htm


kishorekca wrote:
>
> சூரியகாந்தி - மாண்புமிகு ஜெ வும் முத்துராமனும் நடித்தது. பொருத்தமான இடத்தில் பாட்டு உபயோகப்படுத்தி
> யிருகிறார்கள்: நாயகனுக்கும் நாயகக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. அவளுக்கு வேலையில் பதவி உயர்வு கி
> டைக்கிறது - அவனைவிட அதிக சம்பளமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அவள் தன்னை
> உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறான், தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறான். அவளைப் பாராட்ட
> நடக்கும் விழாவில் பார்வையாளனாக அமர்ந்த்திருக்கிறான். அப்போது டி.எம்.ஸே படத்திலும் வந்து பாடுவார்:
>
> பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
> யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சொக்கியமே
> கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
> ..
> நீயும் நானும் சேர்த்திருந்தோம் நிலவும் வானும் போல
> இன்று நான்மட்டும் தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்த்ததாலே
> என் உள்ளம் எனைப்பர்த்து கேலி செய்யும்போது
> இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது
> ..
> மதியாதார் தலைவாசல் நுழையாதே என்று
> மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது
> அதில் அர்த்தம் உள்ளது
> ..
>
> நிற்க. மயில் ராவணன் கதையை திரு. கணேசன் சொன்னதுபோல் வலையின் மூலமாக வரவழைத்து
> படித்துக்கொண்டிருக்கிறேன். கதையின் சாரத்தைவிட அதில் வரும் குறிப்பிட்ட தர்க்கவாதங்கள் சுட்டும்
> கருத்துக்கள் சிந்தனைக்க்றியவையாக இருக்கின்றன. படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன்.
>
> அன்புடன்,
> கிஷோர்
>
> --- In agathiyar@y..., JayBee wrote:
> >
> > அன்பர்களே,
> >
> > ஒரு பழமொழி இருக்கிறது.
> > "கருடா சுகமா?"
> >
> > சிவபெருமானைப் பார்ப்பதற்காக விஷ்ணு கைலாயத்திற்குச்
> > சென்ற சமயம். தம் வாகனமாகிய கருடனிலிருந்து இறங்கிச்சென்றார்.
> > கருடன் ஒருபுறமாக நின்றிருந்தது. சிவனை விஷ்ணு சந்திக்கும்
> > வேளையில் சிவனுடைய தலையில் இருந்த பாம்பு, கருடனைப் பார்த்து,
> > "என்ன கருடா! சுகமா?" என்று எகத்தாளமாகக்கேட்டதாம். சாதாரணமான
> > நிலையில் கருடனின் நிழல் பட்டால்கூட பாம்புக்குச் சித்த பிரமை
> > பிடிக்குமாம். ஆனால் இப்போதோ நிலைமையே வேறு. சிவனின்
> > தலையில் அல்லவா உட்கார்ந்திருக்கிறது. தன்னுடைய ஜன்மவைரியாகிய
> > கருடனோ அடங்கி ஒடுங்கிப் பவ்வியமாக ஓர் ஓரத்தில் நின்று
> > கொண்டிருக்கிறது.
> > அந்த ஸ்தானம் கொடுத்த தெனாவெட்டில்தான் அப்படியொரு
> > தில்லோடு கருடனைப் பார்த்துக் கேட்டிருக்கிறது.
> > அதற்கு அந்த கருடன் சொன்னதாம்:
> > "அதெல்லாம் அவரவர் இருக்குமிடத்தில் இருந்தால் சுகம்தான்".
> >
> > இந்தக் கதை மிகவும் பழமையானதாகத்தான் இருக்கும்போல்
> > தெரிகிறது. ஏனெனில் முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு
> > துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்முன்னர் பாடிய 'நன்னெறி'
> > என்னும் நீதிநூலில், ஒரு பாடலில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
> >
> > மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
> > வலியோர் தமைத்தா மருவில் - பலியேல்
> > கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
> > படர்நிறையப் புள்ளரசைப் பார்த்து.
> >
> > பலி ஏல் கடவுள் அவிர் சடைமேற் கட்செவி- நைவேத்தியம்
> > போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானின்
> > சடாமுடியின் மீது அமர்ந்திருக்கும் பாம்பு
> > படர்சிறை அப்புள் அரசைப் பார்த்து - படர்ந்த சிறகைக்கொண்ட
> > பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து
> > அஞ்சாது - பயப்படாது.
> >
> > அதுபோல,
> >
> > மெலியோர் - வலிமையிலார்
> > வலிய விரவலரை அஞ்சார் - தம்மைவிட வலிமைமிக்க எதிரிகளைக்
> > கண்டு பயப்படமாட்டார்;
> >
> > எப்போது?,
> >
> > தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தம் எதிரிகளைவிட பலம்
> > வாய்ந்தவர்களைச் சார்ந்திருக்கும்போது.
> >
> > இந்தக் கதையை வைத்துக் கவியரசு கண்ணதாசன்
> > பாடியிருக்கிறார். படத்தின் பெயர் மறந்துவிட்டது.
> >
> > 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு சொன்னது,
> > "கருடா சௌக்கியமா?"
> > "இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!",
> > கருடன் சொன்னது.
> > இதில்
> > அருத்தமுள்ளது.
> >
> > அன்புடன்
> >
> > ஜெயபாரதி
> >
> > ====================
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/

--