From jaybee@... Mon Jul 22 22:29:54 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 23 Jul 2002 05:29:53 -0000
Received: (qmail 76348 invoked from network); 23 Jul 2002 05:29:53 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 23 Jul 2002 05:29:53 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 23 Jul 2002 05:29:53 -0000
Received: from user (sp-103-40.tm.net.my [210.186.103.40]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 HotFix 0.6 (built Apr 26 2002)) with SMTP id <0GZO008H7SLIV8@...> for agathiyar@yahoogroups.com; Tue, 23 Jul 2002 13:29:44 +0800 (SGT)
Date: Tue, 23 Jul 2002 13:28:42 +0800
Subject: Uvamai #13
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020723132842.006fe20c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19170


அன்பரகளே,

உவமைகளைப் பற்றி ஓர் இழை அகத்தியத்தில்
ஊடாடுகிறது அல்லவா?
சில அருமையான உவமையைச் சினிமாப் பாட்டுக்களில்
காணலாம்.

வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
வாரியெடுத்தா வழுக்குறியே நீ அலேக்

இது ஒரு சாதாரண உதாரணம்.
சினிமாக்களில் வரும் உவமைகளைப் பற்றி ஒரு
டாக்டரேட்டுக்கு உரிய சமாசாரமே இருக்கிறது. யாராவது
செய்திருக்கிறார்களா, என்ன?

மலேசியாவில் இப்போது ஒரு புதிய இசை/நடனத் துறை
உருவாகியிருக்க்றது.

Digital Remix என்பது அதன் பெயர்.
பழைய படங்களில் உள்ள பாட்டுக்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
'கிருஷ்ணா முகுந்தா முராரி, 'மணப்பாறைமாடு கட்டி' போன்றவை.
அந்த பாட்டுக்களை மலேசிய உள்நாட்டு இளம்பாடகர்களே பாடுகிறார்கள்.
மலேச்யாவின் இளைஞர்கள் பலருக்கு நல்ல குரல்வளம் உண்டு.
அவர்களில் சிலர் மிகவும் நன்றாகப் பாடுவார்கள். சர்வதேச அளவு
கோலைத் தாராளமாகத் தாண்டிவிடமுடியும். ஆனால் வாய்ப்புகள்
மிக மிகக் குறைவு. இருக்கும் வாய்ப்பையெல்லாம் ஒரு சிறு கும்பல்
'ஸாப்பு'(sapu) - அபேஸ் பண்ணிக்கொள்ளும். எப்போதும் அந்தச் சிறு
கும்பல்களைச் சேர்ந்தவர்களே எல்லா இசை நடன நிகழ்ச்சிகளையும்
கைப்பற்றிக்கொள்வார்கள்.
இந்தப் போக்கு எல்லாத் துறைகளிலும் நிலவியிருக்கிறது.
இலக்கியம், மாநாட்டுப் பிரதிநிதித்துவம்....you name it.
வாய்ப்பில்லாத காரணத்தாலும், வசதியில்லாத காரணத்தாலும்,
விளம்பரம் இல்லாத காரணத்தாலும் அவர்கள் பாலை நிலத்து மலர்களாக உதிர்ந்துபோய்க்கொண்டிருந்தனர்.
இப்போது தனியார் தொலைக்காட்சிகள்
அவர்களுக்கென்று இசைப் போட்டிகள் வைக்கின்றன. அதில்தான் நாம்
பலரை இப்போது காணமுடிகிறது. அவர்களுடைய திறமை நம்மை
வியக்கவைக்கிறது. இத்தனை நாட்கள் இவர்களெல்லாம் எங்கே
இருந்தார்கள்? இன்னும் எத்தனை எத்தனையோ பேர் அந்த வாய்ப்புக்கூட
இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்போது அந்த
lime-light-ஐக் காணப்போகிறார்கள்? இன்னும் எத்தனை பேர்
இருக்கிறார்களோ? அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது?
நிச்சயமாகப் பலர் இலவு காத்த கிளியாகத்தான் இருப்பார்கள்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
அந்தப் பழைய பாட்டுகளுக்கு தாளக்கட்டை அவர்களே
சொந்தமாகப் போட்டுக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பைலாவுடன்
உருமிக்கொட்டு/நையாண்டிமேளக் கலவையாக இருக்கும்.
மலேசிய 'தைப்பூசக்கொட்டு' நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
நடுநடுவே அவர்களாகவே சொந்தமாக இட்டுக்கட்டிய சில
பாட்டுக்களையும் ஏதாவது வசனங்களையும் சொல்வார்கள்.
சில கூச்சல்களையும் போட்டுக் கலந்துகொள்வார்கள்.
அந்த இசைக்குப் பழைய படங்களில் வந்த நடனக்காட்சிகளை
synchronise செய்து போடுவார்கள். 'என்னடி ராக்கம்மா'வுக்கு பிரபுதேவா
ஆடிக்கொண்டிருப்பார். 'மணப்பாறை மாடு கட்டி' முரளி ஆடிக்
கொண்டிருப்பார். ரஜினி மீனாவுடன் வேறு ஏதோ ஒரு பாட்டுக்கு
'தில்லானா தில்லானா' ஆடிக்கொண்டிருப்பார்.
கேட்பதற்குப் பார்ப்பதற்கு நன்றாகயிருக்கும்.

அந்த மாதிரி டிஜிட்டல் ரிமிக்ஸ் பாட்டில் வந்த வரிகள்:

'குலுக்கிவிட்ட கொக்காக்கோலா போல
சாய்ங்கால வேளெ
பொங்கி வந்தாளே'

உற்சாகமும் குதூகலமும் ஆர்வமும் எதிர்பார்ப்பும்
பொங்கப் பொங்க ஒரு பெண் வருகிறாள். அவளுக்கு
'குலுக்கிவிட்ட கொக்காக்கோலா' உவமை.
இது எப்படி இருக்கு!

இதையெல்லாம் தூக்கியடிக்கும் ஓர் உவமைக் களஞ்சியமே
ஒரு பழம்பாடலில் இருக்கிறதாக்கம்!

அன்புடன்

ஜெயபாரதி

===========================