From jaybee@... Thu Jul 25 02:23:09 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 7 4); 25 Jul 2002 09:23:09 -0000
Received: (qmail 69484 invoked from network); 25 Jul 2002 09:23:09 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 25 Jul 2002 09:23:09 -0000
Received: from unknown (HELO n4.grp.scd.yahoo.com) (66.218.66.88) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 25 Jul 2002 09:23:09 -0000
Received: from [66.218.67.154] by n4.grp.scd.yahoo.com with NNFMP; 25 Jul 2002 09:23:09 -0000
Date: Thu, 25 Jul 2002 09:23:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Uvamai #14 plus plus plus plus
Message-ID:
In-Reply-To: <3.0.3.32.20020723132842.006fe20c@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2632
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "jaybee555"
X-Originating-IP: 210.186.103.134
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 19214

--- In agathiyar@y..., JayBee wrote:
>
> அன்பரகளே,
>
> உவமைகளைப் பற்றி ஓர் இழை அகத்தியத்தில்
> ஊடாடுகிறது அல்லவா?
>
>
> இதையெல்லாம் தூக்கியடிக்கும் ஓர் உவமைக் களஞ்சியமே
> ஒரு பழம்பாடலில் இருக்கிறதாக்கம்!
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி

>
அன்பர்களே,

கீழே கண்ட படிவமே மூல ஏட்டில் கண்டபடி எழுதப்பட்டது.
அதனை அடுத்துள்ள சந்தி பிரிக்கப்பட்ட படிவம்.
முதலில் உவமை சொல்லும் நேர்த்தியையும் அதன் அடுக்கான
சீரான ஓட்டத்தையும் நயத்தையும் ரசிப்போம்.
அதன் பின்னர் கூட்டாகச்சேர்ந்து அதன் பொருளுணரப்
பார்ப்போம்

வாரிட்டுவிம்மிப்புடைத்திறுகியிளகிமார்பிடமெலாங்கவர்ந்து
வட்டமிட்டடியிட்டுநாளுக்குநாண்மேல்வளர்ந்துபூரித்துமுத்து
மாலையிட்டிறுமாந்துபட்டவர்த்தனயானைமத்தகத்தோடெதிர்த்து
வாதிட்டுமல்லிகைப்பூச்செண்டினைத்தினம்வாட்டப்படுத்திவரையைப்
போரிட்டுமைந்தர்கண்மனஞ்சூறையிட்டுமேற்புளகித்துவச்சிரரத்னப்
புதுச்செப்பினைத்தோழமைக்கொண்டுபொன்னினைப்பொடியாவராவி
மீதிற்பொட்டிட்டதென்னவேதேமற்படர்ந்துசெம்பொற்சரிகைவேலை
யிட்டுப்புனைதருரவிக்கையையிறுக்கிக்கிழித்துப்புறப்பட்டுவாசனைப்பூந்
தாரிட்டுவரவரப்பளபளப்பாகியுயர்தங்கக்கிணத்தையொத்துச்
சந்தனம்புனுகுகஸ்தூரிகர்ப்பூரஞ்சவாதுகுங்குமமணிந்து
சந்த்ரகாவிச்சேலைவல்லவாட்டுக்குட்டதும்பியண்ணாந்திடையினிற்
தாங்காதெனக்கனத்தோங்கிமன்மதனுஞ்சலாமிட்டுநிற்கவுந்தான்
சீரிட்டுநின்றுதந்தலைவணங்காமற்றிரண்டபூண்முலைகளுன்றன்
திருமார்பிலணையவோரூசிமேலேதவஞ்செய்கின்றதொக்குமென்னுஞ்
சிறுரோமரேகையாள்வந்தாள்பராக்கென்றுசேவித்துநிற்கிறாள்பார்
திகழ்வடுகநாததுறைமெச்சுப்ரதானிசிவசுப்ரமண்ணியராசனே!


வாரிட்டு விம்மிப் புடைத்து இறுகி இளகி மார்பு இடம் எலாம்
கவர்ந்து
வட்டம் இட்டு அடியிட்டு நாளுக்கு நாள் மேல்வளர்ந்து பூரித்து, முத்து
மாலையிட்டு, இறுமாந்து பட்டவர்த்தனயானை மத்தகத்தோடு எதிர்த்து
வாதிட்டு, மல்லிகைப் பூச்செண்டினைத் தினம் வாட்டப்படுத்தி, வரையைப்
போரிட்டு, மைந்தர்கண் மனம் சூறையிட்டு, மேற்புளகித்து, வச்சிர
ரத்னப்
புதுச் செப்பினைத் தோழமைக்கொண்டு, பொன்னினைப் பொடியாய் அராவி
மீதிற் பொட்டு இட்டது எ(ன்)னவே தேமல் படர்ந்து
செம்பொற் சரிகை வேலை
இட்டுப் புனைதரு ரவிக்கையை இறுக்கிக் கிழித்துப் புறப்பட்டு,
வாசனைப் பூந்
தாரிட்டு, வரவரப் பளபளப்பாகி உயர்தங்கக்கி(ண்)ணத்தை ஒத்துச்
சந்தனம் புனுகு கஸ்தூரி கர்ப்பூரம் ச(வ்)வாது குங்குமம்
அணிந்து
சந்த்ரகாவிச் சேலை வல்லவாட்டுக்குட்ட தும்பி அண்ணாந்து இடையினிற்
தாங்காது எனக் கனத்து ஓங்கி, மன்மதனும் சலாமிட்டு நிற்கவும்,
தான்
சீரிட்டு நின்று, தன் தலை வணங்காமல் திரண்ட பூண்முலைகள் உன்றன்
திருமார்பில் அணைய ஓர் ஊசி மேலே தவம் செய்கின்றது
ஒக்குமென்னும்
சிறு ரோமரேகையாள் வந்தாள்; "பராக்' என்று சேவித்து
நிற்கிறாள் பார்!
திகழ் வடுகநாததுறை மெச்சு ப்ரதானி சிவசுப்ரமண்ணிய ராசனே!

அன்புடன்

ஜெயபாரதி

===============================