From jayandgl@... Sat Nov 30 03:41:10 2002
Return-Path:
X-Sender: jayandgl@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 2 3 0); 30 Nov 2002 11:41:10 -0000
Received: (qmail 83058 invoked from network); 30 Nov 2002 11:41:09 -0000
Received: from unknown (66.218.66.216) by m12.grp.scd.yahoo.com with QMQP; 30 Nov 2002 11:41:09 -0000
Received: from unknown (HELO SifyMail1.1) (202.144.76.20) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 30 Nov 2002 11:41:08 -0000
Received: (qmail 19879 invoked by uid 7002); 30 Nov 2002 17:07:19 +0530
Received: from 202.144.76.20 (HELO SifyMail1.0) (202.144.76.20) by 202.144.76.20 with SMTP; 30 Nov 2002 17:07:19 +0530
Received: (qmail 19860 invoked by uid 7002); 30 Nov 2002 17:07:14 +0530
Received: from 202.9.169.46 (HELO a) (202.9.169.46) by 202.144.76.20 with SMTP; 30 Nov 2002 17:07:14 +0530
Message-Id: <3.0.5.32.20021130073858.007af810@...>
X-Sender: jayandgl@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sat, 30 Nov 2002 07:38:58 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: Agaththiyar Panjsapatsi - 5
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: njaanavettiyaan
X-Yahoo-Group-Post: member; u=118772836
X-Yahoo-Profile: jayandgl
X-Yahoo-Message-Num: 21570
அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்
**************************
பகுதி 5
---------
41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.
42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.
43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
மாவிற் புவியாளு மாமயிலுங் - கூவி
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
கறங்கு மேகக் கலையாய் காண்.
44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
வல்லம் புவியாளும் வாரணமு - மில்லுறங்கு
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
யேந்திழையா யென்னே இடர்.
45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
செகத்திற் கொடியரசு செய்யவே - நகைத்துத்
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
மாங்குயிலே யென்னா மதி.
46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
தப்பிலாக்கோழி தரையாளும் - ஒப்பிலா
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
சேலார்விழி மடவீர் செப்பு.
47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் - பொல்லாத்
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
தாக்கமலைப் பொடியாந் தான்.
48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.
49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.
50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
பி.கு: உரை பின்னர் தொடரும்