From banukumar r@y... Fri Apr 30 01:40:04 2004
Return-Path: X-Sender: banukumar r@y...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 25885 invoked from network); 30 Apr 2004 08:40:04 -0000
Received: from unknown (66.218.66.167)by m4.grp.scd.yahoo.com with QMQP; 30 Apr 2004 08:40:04 -0000
Received: from unknown (HELO web12505.mail.yahoo.com) (216.136.173.197)by mta6.grp.scd.yahoo.com with SMTP; 30 Apr 2004 08:40:04 -0000
Message-ID: <20040430083956.7133.qmail@w...>
Received: from [203.199.248.162] by web12505.mail.yahoo.com via HTTP; Fri, 30 Apr 2004 01:39:56 PDT
Date: Fri, 30 Apr 2004 01:39:56 -0700 (PDT)
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <408C49E8.000004.00800@PERSONAL-42BOC0>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
X-eGroups-Remote-IP: 216.136.173.197
From: banukumar rajendran Subject: Re: [agathiyar] Somadeva's Niithi work
X-Yahoo-Group-Post: member; u=11040954
X-Yahoo-Profile: banukumar r
ஐயா,
<<<சமணத்தில் மகாபாரதம், இராமயணம்பகவத் கீதை
ஆகியவை
உள்ளனவா?>>>>>>
பாரதமும், இராமாயணமும் உண்டு.! கீதையில்லை. :-))
மகாவீரரின் பிரதம கணதரரான கெளதமர் வாயிலாக, குரு பரம்பரையாக
கீர்த்திதர ஆசாரியார் அறிந்தார். பின் விமலசூரி என்பவர் இராமர்
வரலாற்றை ப்ராகிருத மொழியில் 'பவும சரியம்' என்ற பெயரால்
கி.பி.4ஆம் நூற்றாண்டில் இயற்றினார். அதற்கு பின் இரவிசேனாசாரியார்
இராம சரித்திரத்தை வடமொழியில் 'பத்ம புராணம்' என்ற பெயரால்
கி.பி. 677 ஆம் ஆண்டில் இயற்றினார்.இவர் சேன சங்கத்தைச் சேர்ந்தவர்.
தொண்டை நாட்டினர். தமிழர்.(சேட் இல்லை :-))
சுமார் கி.பி.1100 ல், அபிநவ பம்பா என்பவர் கன்னட மொழியில்
இராமசந்திர சரித புராணம் இயற்றினார். அதுவே பின்னாளில் பம்பா
இராமாயணம் என்று அழைக்கப்பட்டது. பின் கி.பி.1596ல் தேவ விஜயகணி
என்பவர் வடமொழியில் வசனமாகவும், கி.பி.1766ல் பண்டிதர் தெளலத்ராம்
காச்லீவால் இந்தி மொழியில் உரை நடையாக எழுதினார்கள். இந்நூட்களே
மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லா மாநிலத்திலும் தமிழ் உட்பட
வழங்கிவருகிறது.
In Tamil land, Jaina Ramayanam was lost. இப்போது
கிட்டவில்லை. உரையாசிரியர்கள் மேற்கோள்களினால் அறியப்படுகிறது.
மயிலையாரின் "மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற புத்தகத்தில்
மேற்கோள்கள் தரப்பட்டிருக்கிறது. மற்றும் வையாபுரியாரின் "தமிழர்
பண்பாடு" தொகுதி ஐந்திலும் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுருக்கின்றன.
ஜைன இராமாயணம், கம்ப இராமாயணத்தை விட காலத்தால் முந்தியது. May
be around 4th ce., வையாபுரியார் தம் நூலில்...
..... "சிறந்த நடைக் கொண்டது. பொருட் செறிவு நிறைந்தது. ஆனால்,
கதையமைப்பில் தாழ்ந்தது" என்று கூறியிருக்கிறார்.
கம்பர் தான் எழுதிய இராம காவியத்தை முதன்முதலில் ஜைன முனி சங்கத்திடம்
காண்பித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே தன் நூலை அரங்கேற்றினார்
என்பர்.(மயிலையார்)
பாரதம் இருந்ததற்கும் ஆதாரம் உண்டு. மேற்கொண்டு யாராவது தகவல் தந்தால்
நன்றாய் இருக்கும்.
<<<<<கண்ணனும் இராவணனும் தீர்த்தங்கரர்களாக வந்தனர் என்று சென்னை பானு
குமார்ராஜேந்திரன் சொன்னார். >>>>
மன்னிக்கவும். வருவார்கள் என்றேன். முறையே முதலும் கடைசியுமாக வருவார்கள்.
தமிழில் இராவணேந்திர காவியமும் இருந்தது. வித்தியாதரன். சிறந்த ஜின
பக்தன். பிறர்மனை நோக்கியதால் தன்னிலை தாழ்ந்தான்.
இப்போது உள்ள ஒரே நூல் ஸ்ரீபுராணம் மட்டுமே. இதில் பாரத கதையும்,
பதும(இராம) கதையும் சுருங்கக் காணலாம். மணிப்ரவள நடையில் அமைந்த நூல்.
இரா.பானுகுமார்,
சென்னை.
--- dotthusg wrote:
> ஓம்ஓம். அன்புடன் கணேசன் அவர்களே! வணக்கம். சமணத்தில் மகாபாரதம்,
> இராமயணம்பகவத் கீதை ஆகியவை
> உள்ளனவா?
> கண்ணனும் இராவணனும் தீர்த்தங்கரர்களாக வந்தனர் என்று சென்னை பானு
> குமார்ராஜேந்திரன் சொன்னார். இதை
> அவரும் விளக்கலாம்.
> அன்புடன்,
> வெ.சுப்பிரமணியன்,
> ஓம்.
__________________________________
Do you Yahoo!?
Win a $20,000 Career Makeover at Yahoo! HotJobs
http://hotjobs.sweepstakes.yahoo.com/careermakeover