From jaybee@t... Fri Apr 30 09:40:09 2004
Return-Path: X-Sender: jaybee@t...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (qmail 59788 invoked from network); 30 Apr 2004 16:40:08 -0000
Received: from unknown (66.218.66.166)by m3.grp.scd.yahoo.com with QMQP; 30 Apr 2004 16:40:08 -0000
Received: from unknown (HELO n16.grp.scd.yahoo.com) (66.218.66.71)by mta5.grp.scd.yahoo.com with SMTP; 30 Apr 2004 16:40:08 -0000
Received: from [66.218.67.251] by n16.grp.scd.yahoo.com with NNFMP; 30 Apr 2004 16:39:03 -0000
Date: Fri, 30 Apr 2004 16:39:03 -0000
To: agathiyar@yahoogroups.com
Message-ID: In-Reply-To: <20040430083325.44133.qmail@w...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3333
X-Mailer: Yahoo Groups Message Poster
X-eGroups-Remote-IP: 66.218.66.71
From: "jaybee555" X-Originating-IP: 202.188.72.160
Subject: Re: Somadeva's Niithi work
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
--- In agathiyar@yahoogroups.com, banukumar rajendran wrote:
> ஐயா,
>
> அந்த வலைப்பதிவில்...
> <<> scholar has universal appeal and rises above caste and
> creed. It is wholly devoted to welfare of a state.>>>>
>
> இக்கருத்து குறளுக்கும் பொருந்தும்.
>
> <<<மிகப் பழங்காலத்தில் சமணம், பௌத்தம், லோகாயதம்,
> எல்லாம் "ஹிந்துயிசம்" என்று பெருத்த வேறுபாடு இல்லை.>>>
>
> ஜைன வரலாற்றை நோக்குங்கால், பகவான் நேமிநாதர் கடைக்காலத்தில் தான்
> பெரிய இருவேறு பிரிவுகளாக, சிரமண மதங்களாகவும், வைதீக
> மதங்களாகவும் பிரிந்தன. அதற்கு முன்பு வரை ஒரே தரிசனமாகவே இருந்தன.
> ஒன்றை சம்யக் திரிஷ்டி என்றும் மற்றொன்றை மித்யா திரிஷ்டி* என்றும்
> அழைக்கப்பட்டது.
நீங்கள் சொல்லும் அந்த 'மித்யா', நாங்கள் சொல்லும்
'மித்யை'யைப் போன்றதுதானா?
சமணர்களிடம் மித்யை பற்றிய definition என்ன?
'மித்யை' என்பது definition-னுக்குள் அகப்படமாட்டாதுதான்:-)
அன்புடன்
ஜெயபாரதி
> அதனால், பொதுவான கருத்துக்கள் எல்லா மதத்திலும் இருப்பது புதிது அல்ல.
>
>
> இரா.பானுகுமார்,
> சென்னை.
>
>
> --- naa_ganesan wrote:
> >
> > முனைவர் ஜ்யோத்ஸ்னா காமத்தின் ஒரு வலைப்பதிவு:
> >
> http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=699
> >
> > படித்துப் பாருங்கள், சிந்தனையைத் தூண்டும்.
> > சோமதேவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணர்.
> > யஸஸ்திலக காவியம் என்பதைச் சகம் 889ல்
> > (அதாவது கி.பி. 959) இயற்றியதாக அவரே சொல்கிறார்.
> > இதில் யசோதரனின் பட்டமகிஷி அமிர்தமதி.
> > தமிழிலும் அமிர்தமதி (அல்லது அமிர்தபதி) என்று
> > ஒரு காவியம் இருந்திருக்கிறது. இதனை
> > யாப்பருங்கல உரையில், "சிந்தாமணி, சூளாமணி,
> > குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதிஎன்றிவற்றின் முதற்
> > பாட்டு வண்ணத்தான் வருவன" என்ற வாக்கியத்தால்
> > உணரலாகும். அமிர்தபதிக் காப்பியம் கிடைக்குமா?
> > தமிழறியும் பெருமாள் கதை அமிர்தமதியின் கதையை
> > அடியொற்றி எழுந்ததாகச் சொல்வர்.
> >
> > சோமதேவர், உரைகாரர் நேமிநாதர் சமணர்கள்.
> > ஆனால், நீதிவாக்கிய அமிர்தம் அர்த்த சாஸ்த்திரம்
> > கருத்துக்களை உள்ளடக்கியது என்கிறார் திருமதி. காமத்.
> > மிகப் பழங்காலத்தில் சமணம், பௌத்தம், லோகாயதம்,
> > எல்லாம் "ஹிந்துயிசம்" என்று பெருத்த வேறுபாடு இல்லை.
> > சமணர்கள் ராமாயணம், பாரதம் இவற்றைத் தம் போக்கில்
> > நூல்களாக்கியுள்ளனர். நம் வள்ளுவப் பெருந்தகை
> > சமணப்பற்றாளர் என்பதை அ. சக்கரவர்த்தி நயினார்,
> > ஐ. மகாதேவன், மயிலை. சீனி. வேங்கடசாமி எனப் பலர்
> > எழுதிய கருத்துக்களை எழுதியிருக்கிறேன். மனுவின்
> > சில கருத்துக்களோடு ஒத்தும் சிலவற்றோடு முரணியும்
> > பொதுமறையை யாத்துள்ளார் என்று கொள்ளலாம்.
> > இதனை உட்கொண்டு, திருவள்ளுவமாலை,
> > "முப்பாற்குப் பாரதம் சீராம கதைமனுப் பண்டைமறை
> > நேர்வன மற்றில்லை நிகர்".
> >
> > சோமதேவர் நூலில் பல கருத்துக்கள் உண்டு, அவை
> > அவர் சமணர் என்பதற்குத் தடையில்லை. ஒரு நல்ல உதாரணம்.
> >
> > அன்புடன்,
> > நா. கணேசன்
>
>
>
>
>
> __________________________________
> Do you Yahoo!?
> Win a $20,000 Career Makeover at Yahoo! HotJobs
> http://hotjobs.sweepstakes.yahoo.com/careermakeover