From: NARAYANAN SUBRAMANIAM
Date: 4/21/2008 11:06:23 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] My Internet Habits.... And Others (unicode)
படிக்க முடிவில்லை
--- On Mon, 21/4/08, jaybee555 wrote:
From: jaybee555 Subject: [agathiyar] My Internet Habits.... And Others (unicode)
To: agathiyar@yahoogroups.com
Date: Monday, 21 April, 2008, 6:08 AM
From: jaybee555
Date: 4/21/2008 6:08:41 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] My Internet Habits.... And Others (unicode)
அன்பர்களே,
நானும் பத்தாண்டுகளுக்கு மேலாக இணையத்தில்
இருக்கிறேன். ஏராளமாக எழுதியிருக்கிறேன்.
பார்க்கும்போது வேறெதையும் செய்யாமல் இதை
மட்டும் செய்வது போல் தோன்றும்.
சில சமயங்களில் 'ரு நாளைக்குப் பதினாறு மணி
நேரம்வரைக்கும் செலவிடுவதுண்டு.
ஆனால் அவ்வாறு உள்ள சமயங்களில் ஏதாவது
முக்கியமான ஆய்வுக் கட்டுரை - நீள்கட்டுரை எதையாவதைத்
தயாரித்துக் கொண்டிருப்பேன்.
நடுவில் எத்தனையோ டெலி·போன் கூப்பாடுகள்.
பார்க்க வரும் ஆட்கள்.
கடை கண்ணி.
இதன் நடுவே டீவீ. டீவீடீ படங்கள். சில நாட்களில்
மூன்று படங்களைப் பார்த்துவிடுவேன். ஐந்து டாக்குமெண்டரி
வரைக்கும் பார்ப்பதுண்டு.
தூங்காமல் இருப்பதற்கு 'ருவகையான நிலக்கடலை
இருக்கிறது.
இந்த நிலக்கடலையை 'கைச்சாப்புக் கச்சான்' என்று
நம்ம ஆட்கள் குறிப்பிடுவார்கள்.
மலேசியாவில் மெங்லம்பு என்றொரு இடம்.
அங்கு இந்தக் கடலையைத் தயாரிக்கிறார்கள்.
கணக்காக உப்பிட்டு, "ட்டுடன் கூடிய கடலையை
'ரு குறிப்பிட்ட அளவுக்கு வேகவைத்து, அதன் பிறகு அதைப்
பக்குவமாகக் காயவைப்பார்கள்.
பலநாட்களுக்குக் காறலடிக்காமலும் உலுத்துப்
போகாமலும் இருக்கும்.
மலேசியாவில் தயாராகும் இந்த வகைக் கடலையில்
மிகப் பிரபலமானது 'சாப் தாஙான்' என்று சொல்லப்படும்
கடலைதான். அதுதான் கைச் சாப்பு.
இதைச் சாப்பிடுவதால் காலெஸ்டிரால் பிரச்னையும்
குறைவு. மற்ற கடலைகள் செய்வதுபோல எதுக்களிப்பதும்
கிடையாது.
அவசரமில்லாமல் ஆற அமர கடலை "ட்டை
உடைத்து, பருப்பை உள்ளங்கையில் சேர்த்து வைத்துக்
கொண்டு, 'வ்வொன்றாக வாயில் போட்டுக்கொண்டு டீவீ
பார்க்கவேண்டும்.
தூங்கிவிடாமல் இருப்பதற்கு இதை விட நல்ல உபாயம்
இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தக் கடலை பெரிய பெரிய விருந்துகளில்கூட
இடம்பெறும்.
நம்ம ஆட்கள் பெரும் பீர் குடியர்கள்.
உடனுக்கு இந்தக் கடலையை உடைத்துச்
சாப்பிடுவார்கள்.
ஏதோ, மெதுவாக நின்று நிதானித்து பீர் வேலை
செய்யும்
என்று நம்புகிறார்கள்.
உடனே குடலில் சார்ந்துவிடாமல் கடலை தடுக்கும்.
ஆகவே நின்று நிதானித்து நீடித்து பீரின் 'கிக்
நிலைத்திருக்கும்.
இதெல்லாம் சொல்லக் கேள்வி.
பீர் குடிப்பதில்லை.
"அப்படியானால் என்ன குடிப்பீர்கள்" என்று யாராவது
கேட்கலாம்.
சொல்லிவிட்டால் அனுப்பியா வைக்கப்போகிறீர்கள்?
ஊலாங் தே என்னும் 'ரு வகை டீ இருக்கிறது.
அது கிடைப்பது அரிது.
ரொம்பவும் விலை. 'ரு டப்பியின் விலை நூற்றிருபது
ரீங்கிட் வரை இருக்கும். அறுபது ரீங்கிட்டுக்கும்
கிடைக்கும்.
அது இன்னொரு ரகம்.
இதற்கென்று டீப்பாட், சிறிய கப்புகள் எல்லாம்
வைத்திருக்கிறார்கள். மெல்லிய சுட்ட களிமண்ணால் ஆனவை.
டீப் பாட்டைக் கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்துத்
தண்ணீரை ஊற்றிவிட்டு, மீண்டும் வெந்நீரை ஊற்றி, அதன்மேல்
பக்குவமாக டீத்தூளைப் போடவேண்டும். இரண்டு Dried Salted
Plums போடவேண்டும். இதை அஸாம்கோ என்பார்கள்.
டீப் பாட்டை மூடிவிடவேண்டும்.
டீப் பாட்டை வைத்துவிட்டு அமைதியாகத் தியானம்
செய்யவேண்டும். அமைதி, Tranquility, Positivism, சாந்தி,
கருணை ஆகிய சாயல்களை மனதில் தோற்றுவித்துக்கொள்ள
வேண்டும். மனம் டீப் பாட்டுக்குள் இருக்கும் டீயில்
இருக்க
வேண்டும்.
அதன் பின்னர் டீக் கப்பை மீண்டும் வெந்நீரில்
ஊறவைத்து
விட்டு, அதில் குறைந்த அளவு டீயை ஊற்றவேண்டும்.
டீக் கப்பை மெதுவாக மூக்கின் கீழ்ப் பிடித்து,
டீயிலிருந்து
வரும் மெல்லிய நீராவியை மிக மெள்ள சுவாசிக்கவேண்டும்.
அந்த Aroma உள்ளே சென்ற பிறகு, டீயை மெதுவாக சப்பி
வாய்க்குள் சுழற்றிவிட்டு, மூச்சை லேசாக இழுத்து, அந்த
அரோமாவை மீண்டும் அனுபவித்து, மெதுவாக மிடறுக்குள்
செலுத்தவேண்டும்.